இறுதி அஸ்திரம் பயங்கரமானது; ஆனால், தவிர்க்கமுடியாது

பயணக்கட்டுப்பாடுகளை விதியுங்கள்; மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துங்கள்; இல்லையேல், கொரோனா மரணங்களையும் தொற்றாளர்களின் ஏறுமுகத்தையும் கட்டுப்படுத்தவே முடியாதென சுகாதார தரப்பினரும் நிபுணர்களும் வலியுறுத்தும் போதெல்லாம், ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யைப் போன்றிருந்த அரசாங்கம், இறுதி அஸ்திரத்தைக் கையில் எடுக்கவுள்ளதாக பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.