துணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்

த்வீபா திரைப்படக் காட்சிகள்.
வாழ்க்கையை விட சினிமா பெரியது இல்லை. அப்படிப் பெரியதாக இருக்க வேண்டுமெனில் சினிமாக்களிலேயே சிறந்த சினிமாவாக அது இருக்க வேண்டும். சமூகத்தின், வாழ்வின், மனிதர்களின் நிதர்சனத்தை எடுத்துக்காட்ட வேண்டும். மிகைப்பூச்சு ஏதுமின்றி நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் ஒரு பிரதிபிம்பமாக அது இருக்க வேண்டும். பெண்ணுக்கான, விளிம்புநிலை மனிதர்களுக்கான நீதியை சினிமாவுக்கான கலை மொழியில் பேசினால் உண்மையில் அது பெரிய சினிமாதான்.