அப்பாத்துரை விநாயகமூர்த்தி இயற்கை எய்தினார்

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம், இயற்கை எய்தினார்.தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டவர் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அங்கேயே தங்கி தனது அரசியல் செயற்பாட்டைத் தொடரந்தவர். தமிழ் கைதிகளை விடுவிப்பதில் எந்த ஊதியமும் பெறாமல் நீதிமன்றங்களில் செயற்பட்டவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு