அரசியலுக்கு விடைகொடுக்க தயாராகும் ரணில்?

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைக்கு அமையவே வேட்பாளராக நிறுத்தியதாகவும், இம்முறை பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RECOMMENDED