ஆதரவு கரம் நீட்டினார் – JVP அனுர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ​தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.