இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 பெண்களும் 31 ஆண்களும் நேற்று  முன்தினம் (16) உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.