உக்ரேனுக்குள் படைகளைச் செல்ல உத்தரவிட்ட புட்டின்

கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிந்த இரண்டு பிராந்தியங்களான டொனெஸ்டெக், லுகன்ஸ்க்க்கு படைகளைத் தரையிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டு பிராந்தியங்களையும் நேற்று முன்தினம் அங்கிகரித்ததைத் தொடர்ந்தே இந்நடவடிக்கையை ஜனாதிபதி புட்டின் மேற்கொண்டுள்ளார்.