கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.