கைதி மரணம்: மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்

எம்பிலிப்பிட்டிய, கந்துருகஸ்ஸார திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்துவந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதியின் மரணம் தொடர்பில் சிறைச்சாலையின் மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏகநாயக்க, இன்று (23) தெரிவித்தார்.