கொரோனா தொற்று: ‘தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்’

கொரோனா தொடர்பில் உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வு அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி அகிலன், உதவிப் பிரதேச செயலாளர் சுவாகர் இராணுவ உயர் அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.