சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி, இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார்.

அங்கு அவர் ஏற்கெனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா என்று, சந்தேகம் எழுந்துள்ளது.