’சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும்’

அவர் மேலும் தெரிவிக்கையில், “மேலும் எமது நிலை உணர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . 

எமது நாடு பொருளாதார ரீதியில் ஒர் இக்கட்டான நிலையை எட்டியிருக்கின்ற வேலையில் அதற்கெதிரான மக்களது அதற்கெதிரான மக்களது கோப வெளிப்பாடுகள் ஆர்ப்பட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆர்ப்பட்டங்கள் நிகழ்வுகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது . 

எரிபொருள் , எரிவாயு , மின்சாரம் போன்ற தேவைகள் தடைப்பட்டுள்ளன பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . 

தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து எமது தாய் மண்ணை மீட்டெடுப்போம் சகல மக்களும் சரி நிகர் சமன் என்ற நீதியை உருவாக்குவோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.