சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி – டக்ளஸ்

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.