தியாகிகள் தினம் 19.06.2016 மட்டக்களப்பு

 

பத்மநாபா மக்கள் முன்னணி

தமிழர் சமூக ஜன நாயகக் கட்சி (SDPT)

இடம் : போக்கஸ் மண்டபம்

(சென்றல் றோட், மட்டக்களப்பு)
காலம்: 19.06.2016 ஞயிற்றுக்கிழமை
மணி : காலை 9.30
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும்உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருவதற்காக “தியாகிகள் தினம்” 2016 இம்முறை மட்டக்களப்பில் நினைவு கூறுவதோடு.
இதுவரை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக செயற்பட்டுவந்த நாம் ” தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” எனும் புதிய கட்சிப்பெயரில் ” “பத்மநாபா மக்கள் முன்னணி” எனும் அமைப்பாகவும். அரசியல் ஆர்வமுள்ள சகலதரப்பினரையும் இணைத்துக்கொண்டு மக்கள் இயக்கமாக புதிய கட்சிப்பெயரில் செயற்படவுள்ளோம்.
இந் நிகழ்வில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி மற்றும் எமது வருங்கால செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமும், கலந்துரையாடலும் முன்னாள் வட/கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” இன் முக்கியஸ்தரும் அ.வரதராஜப்பெருமாள் உற்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நடைபெறவுள்ளது. போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள், சகோதர இயக்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” சார்பில் அழைக்கின்றோம்.