’நெருக்கடியை தீருங்கள்’ மன்றாடுகிறது மன்றம்

அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் டொக்டர் கமல் ஏ. பெரேரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் வேகமாக பரவி, நாட்டின் வைத்தியசாலை அமைப்பை முடக்குகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒட்சிசன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலை அமைப்பில் தாங்க முடியாத நிலையை அடைந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.