நேபாள நாடாளுமன்ற கலைப்பைக் கோரியுள்ள அமைச்சரவை

நாடாளுமன்றக் கட்சி, மத்திய செயற்குழு, கட்சியின் செயலகத்தில் பிரதமர் ஷர்மா ஒளி பெரும்பான்மையை இழந்து விட்டதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரொருவரான பிஷ்னு றிஜால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சிக்குள் சமரசமொன்றை எதிர்பார்க்காமல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஒளி தீர்மானித்துள்ளதாக பிஷ்னு றிஜால் மேலும் கூறியுள்ளார்.