பெண்களைக் காக்க வருகிறது ‘பிங்க்‘

இதனையடுத்து மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, உரிமை, இணைய சுதந்திரம் ஆகியனவற்றைப் பாதுகாக்கும் வகையில் பிங்க் ப்ரொடக்சன் (Pink Protection )என்ற திட்டத்தைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.

இதற்காக 10 கார்கள், 40 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 20 சைக்கிள்களைப்  பொலிஸாருக்கு முதலமைச்சர்  ஒதுக்கியுள்ளார். இச் சிறப்புப் படையானது  வீதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் தைரியமாகப் பொலிஸாரிடம் தாம் எதிர் நோக்கும் இன்னல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன், “இந்தப் புதிய திட்டத்தின்படி பொலிஸார் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடும்ப வன்முறை தொடர்பான தகவல்களைப் பெறுவர்.

இக்குழுவில் உள்ள அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பேசி அவர்கள் பகுதியில் ஏதேனும் குடும்ப வன்முறை பிரச்சினைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவர்” என்றார்.