போரின் மடியில்

14.05.2009 போரின் போது முள்ளிவாய்க்காலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் செல்லும் போது புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு பலியான எனது பெறாமகள் சர்மியா . முள்ளிவாய்க்காலிருந்து வட்டுவாகல் வந்து நீரேரியைக் கடக்க மரத்தின் கீழ் இருக்கும் போது புலிகளின் குண்டுகள் தப்பிச் செல்லும் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது.அப்போது இவளின் பின் மண்டையில் குண்டு பாய்ந்து மூளை சிதறி சாகடிக்கப்பட்டாள். உடலை அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஏனைய உயிர்களைக் காப்பாற்ற சில நிமிடங்களே தாய் மடியில் வைத்து அழுதுவிட்டு கடைசியாக தனது மகளை மரத்தினடியில் போட்டு விட்டு தப்பியோடி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை .அந்த நேரத்தில் பல உயிர்கள் சாகடிக்கப்பட்டு அப்படியே உடல்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டன. போர் தந்த சிறந்த பாடம் தமிழ் மக்களுக்கு .அவளின் நினைவு தினம் இன்று.

(Kala)