‘மண்ணையா நாங்கள் உண்பது’

பொருள் விலையும் வரிச்சுமையும் கடன்களும் பிரல்லுகளும் தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? என்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள்,மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. முன்னிலை சோஷ‪லிஸக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில் ‘சம்பளத்தைக் கூட்டு’ என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.