முல்லை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (17) மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.