மெகெல்லேயைக் கைப்பற்றியதிலிருந்து முன்னேறும் போராளிகள்

தற்போது மெகெல்லேயிலிருந்து வட மேற்காக 140 கிலோ மீற்றரிலுள்ள ஷிரே நகரத்துக்குள் போராளிகள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதியோப்பிய இராணுவத்தை ஆதரிக்கும் எரித்திரியப் படைகள் குறித்த நகரத்தை முன்னர் கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில், எரித்திரியா, அம்ஹரா பிராந்தியத்துக்குள் நுழைந்து எதிரியை அழிக்கப் போவதாக போராளிகளின் பேச்சாளர் கெடசூ றெடா தெரிவித்துள்ளார். அம்ஹராவிலுள்ள ஆயுதக் குழுக்கள், அரசாங்கப் படைகளுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.