வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பீ.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தெங்கு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.