வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தம்?

விவசாயிகள் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு காணும் வகையில் நீதிமன்றம் சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை யோசனை தெரிவித்தது.