17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய இராணுவம்

காஷ்மீரின் குப்வாரா பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதேபோன்று, கெரான் பிரிவில் பனியில் செல்ல கூடிய திறன் வாய்ந்த ஸ்கூட்டரில் ரோந்து செல்லும் பணியிலும்  இராணுவ படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவு இன்று அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், பனிப்பொழிவு எதிரொலியாக தெளிவற்ற வானிலை காணப்படும் நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.