3வது சுற்றுலா குழு நாட்டுக்கு வருகை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது சுற்றுலா குழு நாட்டை வந்தடைந்துள்ளது. உக்ரைன் நாட்டிலிருந்தே மூன்றாவது சுற்றுலா குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது. இவ்வாறு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 173 சுற்றுலாப் பயணிகள் மத்தல விமான நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.