ஈழத் தமிழர் பற்றி ஒரு அரசியல்வாதியின் மனிதாபிமானப் பார்வை

போருக்குப் பிறகு மக்களைப் பார்க்க தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்றிருந்தேன். இங்கே பரப்பப்படும் செய்திகளுக்கு மாறாக தமிழகத்தின் மீதும் கோபம் கொப்பளித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். மனது கணத்துப்போனது. (இலங்கை,இந்தியா,சர்வதேச அரசுகள்,புலிகள் என்று அனைவர்மீதும் அந்தக் கோபம் இருக்கிறது) எங்கள் பிணத்தின் மீது அரசியல் செய்தது தவிர தமிழக அரசியல் கட்சிகளும் ,மக்களும் எங்களுக்கு என்ன செய்தார்கள்? எவ்வளவு பேர் தமிழகத்தில் இருந்து போருக்குப் பிறகாவது எங்களை எட்டிப் பார்த்தார்கள்?

(“ஈழத் தமிழர் பற்றி ஒரு அரசியல்வாதியின் மனிதாபிமானப் பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்

இளம் பெண் பலாத்கார படுகொலை சம்பவத்தைக் கண்டித்து கோழிக்கோட்டில் நடந்த போராட்டம்

 

கேரளத்தில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் நீதி கோரி கோழிக்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எர்ணாகுளம் மாவட்டம் ராயமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

(“கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார்.

(“இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்.

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் (04.05.mm2016) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.

(“ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்.” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?

பலமான அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. 2004 ம் ஆண்டுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் மூலம் பெற்றுக் கொண்டு, அவ்வமைப்பையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு,எம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து விட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு வழிவகுத்துஅவர்களைஅரசுக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

(“சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

பிரேசில்: ஆட்சிக் கவிழ்ப்பின் முதல் அத்தியாயம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆட்சிகள் மாறுவது இயல்பு. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் அவ்வாறல்ல. அவை, மக்களின் விருப்புக்கு மாறாகத் திட்டமிட்டு, வேறு நோக்கங்கட்காக நடந்தேறுவன. உலகிற் பல ஆட்சிக் கவிழ்ப்புக்கள் நடந்துள்ளன. அவை இராணுவப் புரட்சிகள், அரண்மனைச் சதிகள், படுகொலைகள் எனப் பல்வகைப்படுவன. ஒவ்வொன்றும் ஏதோவொரு காரணங் கருதியே நிகழ்த்தப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், ஜனநாயகம் என்பதை அரசியலின் அடிப்படையான குறிகாட்டியாக, அரசாட்சியின் பிரதான தூணாகத் தோற்றங்காட்டி அதில் நம்பிக்கை ஏற்பட்டதாற், பழக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முறைகள் ‘ஜனநாயகமற்றவை’ என வெறுக்கப்பட்டன. அதனால் ‘அரசியல் யாப்பு நெருக்கடி’களின் ஊடாக, ஆட்சி மாற்றங்கள் நடந்தன. இப்போது ஆட்சிக் கவிழ்ப்பின் இன்னொரு காட்சி, பிரேசிலில் புதிய வடிவில் அரங்கேறுகிறது.

(“பிரேசில்: ஆட்சிக் கவிழ்ப்பின் முதல் அத்தியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

மாற்று இயக்க அழிப்பின் ஏகபோகம் 30 வருடங்கள்!

1977 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ.தே.க. அமோக வெற்றியீட்டி பதவிக்கு வந்த பின்னர் 1978 இல் புதிய அரசிலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி, ஜே.ஆர். ஜெயவர்த்தனா சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதியானார். இவர், தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை 1979 இல் கொண்டு வந்தார். இது தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான போராட்டங்களை பயங்கரவாதமெனக் கூறி நசுக்கும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்படும் ஒருவரை இந்தச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் தடுப்பில் வைத்து, அதன் பின்னர் அந்தத் தடுப்பினை 3 மாத காலத்திற்கு ஒருதடவை புதுப்பித்து, நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்திருக்க முடியும். அத்துடன் அச்சட்டத்தில் போஸ்டர் ஒட்டுவதே தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

(“மாற்று இயக்க அழிப்பின் ஏகபோகம் 30 வருடங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை இலவசங்களை அள்ளித் தெளித்துள்ளது. இதை விமர்சிக்கும் திமுகவினர் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைக்க என்ன வழி என்கின்றனர்.

திமுக மதுவிலக்கை அமல்படுத்தி, விவசாய கடனை தள்ளுபடி செய்து, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்து, பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்து, இந்த 2 லட்சம் கோடி கடனை எப்படி குறைப்போம் என்று சற்று விளக்கினால் நன்று.

(“தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?” தொடர்ந்து வாசிக்க…)