1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….

1987களில் ஈழ‌ போராளிகள் மூலம் ஜெயவர்த்தனா அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா. அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியது,இலங்கை அரசுக்கு உணவு போட்ட விமானத்தால் குண்டுகளையும் போடமுடியும் என்று சொல்லாமல் சொல்லியது இந்திய அரசு, அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.

(“1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை. பெரும‌ள‌வு க‌றுப்புப் ப‌ண‌ம் கைப்ப‌ற்ற‌ப் ப‌ட்ட‌து. 130000 யூரோ ரொக்க‌ப் ப‌ண‌மாக‌வும், 850000 யூரோ வ‌ங்கிக் க‌ண‌க்குக‌ளில் இருந்தும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்ட‌து. இது தொட‌ர்பாக‌ ஒன்ப‌து பேர் கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவர்க‌ளில் லைக்காவின் பிரான்ஸ் நிர்வாகி Alain Jochimek உம் ஒருவ‌ர் என‌த் தெரிய‌ வருகின்ற‌து. இவ‌ர் ஒரு யூத‌ர். பிரான்ஸில் சியோனிச‌ அமைப்பொன்றை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்.

(“பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை.

இந்திய இடதுசாரிகள் என்றாலே CPI மற்றும் CPI (M) என்கிற இரண்டு கட்சிகளை பிரதான கட்சிகள் எனலாம். CPI ( ML) இந்தி மொழி பேசும் மக்களின் சில பகுதிகளில் பரவலாக இருப்பினும் நாடு தழுவிய அளவில் அதன் அமைப்பு இல்லை. இந்திய அரசு அமைப்பு சட்டத்தை மிகவும் காலதாமதமாக ஏற்றுக் கொண்ட கட்சி. இந்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள் Indian Association of Lawyers மற்றும் All India Lawyers Union என்ற பெயரில் வழக்கறிஞர்களின் அமைப்பை வழி நடத்துகின்றன. தமிழக வழக்கறிஞர்கள் 40 க்கும் மேல் தொழில் செய்ய அகில இந்திய பார்கவுன்சில் தடை விதித்து , அவர்களின் வழக்கை பெங்களூரில் நடத்த உத்தரவிட்டது.

(“நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )

தம்பலகாமம் உதவி அரசாங்க அலுவலகம்,தம்பலகாமம் சந்தியில் உள்ளது.இதன் பின்னால் பற்குணத்தின் அரச வீடு இருந்தது. இதனைச் சுற்றி சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.தமிழர்கள் அதில் இருந்து இரண்டு மைல் உள்ளேயே இருந்தனர்.சந்தியை அண்மித்து ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருந்தன.சந்தியைப் பொறுத்தவரை அது ஒரு சிங்கள கிராமம் போலவே இருந்தது.ஏறக்குறைய இருபது குடும்பங்கள் இருக்கலாம்.அதனை அண்மித்து விகாரை ஒன்றும் இருந்தது.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [3]

ஸ்டாலின் அண்ணா மோட்டார் எறிகணை தொழில்நுட்பம் பற்றிய அறிவை, அது சம்மந்தமான ஆங்கில புத்தகங்களை வாசித்தே தெரிந்து கொண்டார். அதில் தனக்கு தோன்றிய யுக்திகளையும் பயன்படுத்தி, எமக்கு தேவையான விதத்தில் அதனை வடிவமைத்தார். ஒருமுறை மேலெழுந்து நீண்டதூரம் சென்று இலக்கை அடைந்த பின் வீழ்ந்து, ஏற்படும் அதிர்வில் வெடிக்கும் வகையில் வடிவமைத்த மோட்டார், பரீட்சாத்தத்தின் போது, ஈடு செய்ய முடியாத உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீனத்தில் பயிற்சிபெற்ற தோழர் ராஜன் அவர்கள், பரீட்சாத்தத்தில் ஈடுபட்டவேளை மோட்டார் செல், பரல் உள்ளே வெடித்ததால், மிகப்பெரிய இரும்பு துண்டு, அவர் வயிற்றை பிளந்து உயிர் பிரிந்தது. அந்த உன்னதமான தோழர் உயிர் பிரியும் வேளையிலும் கூறியது, இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்துங்கள், தோழர் நாபாவின் கரங்களை பலப்படுத்துங்கள் என்பதே.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [3]” தொடர்ந்து வாசிக்க…)

கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்திறப்பு விழா

 

கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் படத்திறப்பு விழா அங்குள்ள ராயா மாஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.இந்த வைபவத்தில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர்(தி.முக.) சாக்கோட்டை அன்பழகன் தலைமைதாங்கி நடத்தினார். இந் நிகழ்வில் திராவிட கழக தலைவர் வீரமணி,மூத்தபத்திரிகையாளர் ரி.எஸ்.எஸ்.மணி,இந்திய தேசிய காங்கிரஸ் சி.ஜி.மணி,பெண்ணியலாளர் தோழர்ஓவியா,தோழர்சுரேஸ்பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்),தோழர்சுகுசிறதரன்(பத்மநாபா மக்கள் முன்னணி –தமிழர் சமூக ஜனநாயக கட்சி),தோழர்சிவசக்திஆந்தன் பா.உ(ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் திராவிடக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

(“கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்திறப்பு விழா” தொடர்ந்து வாசிக்க…)

26 வது தியாகிகள் தினம் – பாரிஸ்

பத்மநாபா மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 26 வது தியாகிகள் தினம் கடந்த ஞாயிறு 19-06-2016 மாலை பிரான்ஸசின் தலைநகர் பரீசில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள், மக்கள்அமைப்புக்கள, கட்சிகளின் பிரதிநிதிகள் என பலதரப்பினரும் கலந்துகொண்ட உணர்வுபூர்வமானதும் அர்த்தபபூர்வமானதுமான நிகழ்வுகள் அமைந்தது.

(“26 வது தியாகிகள் தினம் – பாரிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

துரையப்பா விளையாட்டு அரங்கம்

இது புதிய பிரச்சினைக்கான திறவுகோல்

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் துரையப்பா என்ற பெயர் நிலையானது.தமிழ் அரசியல்வாதிகளில் பதவியை முழுமையாக பயன்படுத்தி அதிகம் சேவை செய்தவர்கள் ஒருவர் சாவகச்சேரி பா.உ. வே.குமாரசாமி.அடுத்தவர் மேயர் அல்பிரட் துரையப்பா.

(“துரையப்பா விளையாட்டு அரங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..!

 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளாக காலை 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து…..
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

“வீரமக்கள் தின” விழா நடைபெறும் இடம்:

வரசித்தி மஹால்.
Hüttenwiesen Strasse – 6
8108 Dallikon Zurich .

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “வீரமக்கள் தினம்” வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – சுவிஸ் கிளை —

*******************************************

“தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள்”..!!

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள் soodring -34B, 81234 Adlishwil எனும் மண்டபத்தில் 03.07.2016 அன்றையதினம் காலை 08.00 மணியளவில் இடம்பெறஉள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுவரை பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட (பலருக்கும் விண்ணப்பப் படிவம், உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்) பரீட்சை நடைபெறும் 03.07.2016 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்.

10.07.2016 இல் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெறும் “வீரமக்கள் தின” நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

“எதிர்காலம் வளமாக, எழுவோம் பலமாக”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை —

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [2]

ஈடுசெய்ய முடியாத இழப்பு அவரின் பெருமூச்சில் வெளிப்பட்டாலும், எதையும் தங்கும் உறுதியான மனநிலையை அவர் இழக்கவில்லை. ஸ்டாலின் அண்ணா இல்லை என்ற தனிமை அவரை தளர்வடைய செய்தபோதும், அவர் தன் நிலை தவறவில்லை. அதன் வெளிப்பாடு தான் மாலினி எப்படி இருக்கிறா? என என் மனைவி பற்றிய விசாரிப்பு. 16 வருடங்கள் எந்த தொடர்பும் இன்றி இருந்த என்னை, என் குரலைவைத்தே அடையாளம் கண்ட அக்கா, என் மனைவியின் பெயரையும் ஞபகத்தில் வைத்திருந்தது, அவர் எவ்வளவுதூரம் எம்முடன் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதற்கு சாட்சி. காரணம் தினம் தினம் ஸ்டாலின் அண்ணாவை தேடி செல்லும் எண்ணற்ற தோழர்கள் அக்காவின் கையால், காபி அல்லது காலை உணவு உண்டவர்களே. அத்தனை பேரின் பெயர்களும் அவவுக்கு அத்துப்படி. பல தோழர்கள், அவர்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை அக்கா என்னிடம் கேட்டபோது நான் சற்று வெட்கி தலைகுனிந்தேன். காரணம் அவர் நலன் விசாரித்த எவருடனும் நான் தொடர்பில் இல்லை. அது என் தவறில்லை என்பது மட்டுமே உண்மை. வரதனின் கடைசிமகள் [கேரள சினிமா நடிகை] பற்றிய கூறியபோது அவ இங்கதான் கும்பகோணத்தில் தான் பிறந்தா என, அக்கா கூறிய போது ஆச்சரியப்பட்டேன். ஈ பி ஆர் எல் எப் உறுப்பினர் அனைவரின் விபரங்களும் அக்காவின் மனதில் அழியாத கோலமாக இன்றும் இருப்பது, அவரை என் மனதில் ஒரு தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தியது.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [2]” தொடர்ந்து வாசிக்க…)