அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது.குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

(“அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!

ராஜிவ் ஆட்சிக்கு வந்த புதிதில் கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்தான் இருந்தது. இடதுசாரிகளை ஒரு சிறுபிள்ளை மனோபாவத்தில் அவர் விமரிசித்ததும் – கூடவே கைகோர்த்து அலையும் நண்பர்கள்தாம் அவரையும் ஆட்சியையும் இயக்குகிறார்கள் என்ற செய்திகளும்….
‘என்ன நடக்கிறது இங்கே!?’
அருண் நேரு, அருண் சிங், இன்னும் நான் பெயர் மறந்துபோன சிலரும்…ராஜீவுடனேயே வலம் வந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியில் குறிப்பாக மூத்தத் தலைவர்களிடம் இது விசனத்தை உண்டுபண்ணியது.
ஆனால் நிகழ்ந்ததென்னவோ, ஓராண்டுக்குள் ராஜிவிடம் மாறுதல்கள்….!

(“வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

துருவங்கள் இணைந்தன: துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிரிந்த இரு அணியினர் இன்று (21) ஒன்று சேர்ந்தனர். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது இணைவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டனர். இதனடிப்படையில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கே.பாண்டியராஜனும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துறை அமைச்சு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறி உள்ளார் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

தலைகளை தேடும் தமிழர் நிலை?!

ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல. இதனை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் காலத்துக்கு பிந்திய தொடர் நிகழ்வாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது. காரணம் அன்று டொனமூர் அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை வடக்கில் பகிஸ்கரித்தும் அடுத்த தேர்தலில் பொன்னம்பலம் தலைமையிலான அணி பங்குபற்றியது. இருந்து அவர்கள் தேர்தலில் வென்றும் தனி சிங்கள மந்திரிசபை அமைந்தது.

(“தலைகளை தேடும் தமிழர் நிலை?!” தொடர்ந்து வாசிக்க…)

உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

(“உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி.

அது சரி வரதராஜப்பெருமாளைத்தானே இந்திய அரசின் கை கூலி என்றார்கள் அவரைக் காயோம் ஏனையவர்கள்தான் இருக்கின்றார்கள்

பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள்

இது “டிஸ்னி லேன்ட்” அல்ல‌, க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி! ர‌ஷ்யாவில் இன்றைக்கும் சிற‌ப்பாக‌ இய‌ங்கும் க‌ம்யூனிச‌ ந‌க‌ர‌ம். இது அங்கு வாழும் ம‌க்க‌ளின் தெரிவு. யாரும் அவ‌ர்க‌ளை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. (இன்றைய‌ ர‌ஷ்யாவில் க‌ம்யூனிச‌த்தை வெறுக்கும் முத‌லாளித்துவ‌ அர‌சு ஆட்சியில் இருப்ப‌தையும் குறிப்பிட‌ வேண்டும்.)
ஸ்டாலின் கால‌த்தில், சோவிய‌த் யூனிய‌னில் கூட்டுழைப்பு ப‌ண்ணை (Collective farm) முறை கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. நாட்டுப்புற‌ங்க‌ளில், அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்த‌து. அர‌ச‌ ப‌ண்ணைக‌ள் த‌னியாக‌வும், ம‌க்க‌ளின் கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் த‌னியாக‌வும் இருந்த‌ன‌.

(“பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள்” தொடர்ந்து வாசிக்க…)

‘பிரதமர் பங்கேற்கும் வைபவத்தில் பங்கேற்க மாட்டேன்’

காத்தான்குடியில் நாளை நடைபெறவுள்ள நகரசபை கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அததியாய் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் நான் கலந்துகொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘பிரதமர் பங்கேற்கும் வைபவத்தில் பங்கேற்க மாட்டேன்’” தொடர்ந்து வாசிக்க…)

சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்களின் வசதிக்குரியதாகத் தொடர்கிறது. இதற்கும் எம் மதமும் விலக்கல்ல.

(“சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்” தொடர்ந்து வாசிக்க…)