கேரளம்: இடதுகூட்டணிவெற்றிசொல்லும்சேதி

(செ.இளவேனில்)

கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாதவிதி. 1982-க்குப்பிறகு இப்போதுதான் அங்கு ஆளுங்கட்சி ஆட்சியைத்தக்க வைத்துக் கொண்டுள்ளது. 140 இடங்கள் கொண்ட கேரள சட்ட மன்றத்தில், இடது கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் 99. இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபாஜக, இருந்த ஓரிடத்தையும் இழந்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 22 கொவிட்-19-ஆலான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 786ஆக உயர்ந்துள்ளது.  

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.

மு.க.ஸ்டாலின்: நம்பிக்கைகளின் நாயகர்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் தாஜ்மஹாலின் பின்னாலிருந்து குறுகலாய் மெலிந்தோடும் யமுனையைப் பார்த்தபடி நானும் நண்பர் தாமரை செந்தில்குமாரும் நின்றிருந்தோம். தொலைவில் இருந்த ஆக்ரா கோட்டையைக் காட்டி, ஷாஜஹானை ஔரங்கசீப் சிறையெடுத்த வரலாற்றை இருவரும் பேசலானபோது, இயல்பாக தமிழக அரசியல் அந்த உரையாடலுக்குள் நுழைந்தது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளையும், வைத்தியசாலைகளிலுள்ள படுக்கைகளையும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரும், அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதிக்கு மணவாழ்க்கை கசந்தது

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளனர். இதுதொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும். மிகப்பெரிய பணக்கார தம்பதியினர் மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் இருவரும் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிறைக்குள் இருந்தும், மோடியை எதிர்த்து ஒரு தேர்தல் வெற்றி!

சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.

தமிழகத் தேர்தல் முடிவுகள்

(சாகரன்)

திராவிடக் கட்சிகளின் தேர்தல் வெற்றியை நிறுவி நிற்கும் முடிவுகளை தமிழகத் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது. 1967 ஆரம்பித்த இந்த பணம் இரு வேறு முகாங்களாக எம்ஜிஆர் தி.மு.க இல் இருந்து பிரிந்து அ.தி.மு.க ஆரம்பித்த நாட்களில் இருந்து பயணப்பட்டாலும் அடிப்படையில் இரு திராவிட பாரம்பரிய சித்தாந்த செயற்பாட்டின் பயணப்பாட்டுடன் நகர்ந்த வரலாற்றை இந்த தேர்தல் முடிவும் காட்டி நிற்கின்றது.

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் கைது

விடுதலைப் புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார. மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப் புலிகளை மீண்டும் புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் பேரில் 3 மாத கால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தன

தமிழக மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு கண்ணோட்டம்!

இந்திய ஒன்றியத்தின் ஒற்றை தேசிய சர்வாதிகாரத்தை நொறுக்கியிருக்கிறது மாநிலக்கட்சிகள் தெளிவான அரசியல்!மாநில சுயாட்சியை எண்ணிப்பார்த்திருக்கிறார்கள்! மக்கள் வெவ்வேறு கோணங்களில்! வெவ்வேறான திசைகளில்!