13 ஆவது திருத்தம்; இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று (28)  காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

கால்நடைப் பண்ணைகள் ஏன் தோல்வியடைகின்றன…?(பகுதி 1)

(Dr.S.கிருபானந்தகுமாரன் [BVSc,MVSc])


( கால்நடை வைத்தியர்)(கடந்த சில மாதங்களாக தமிழர் பொருண்மியம் வார இதழுக்கு நான் எழுதும் கட்டுரைத் தொடர்)

நேர்மையாக செய்யப்படும் எந்த தொழிலும் இலாபத்தை தர சிறிது காலம் எடுக்கும். சமையலை எடுத்துக் கொள்வோம் ஒரு சிறந்த சமையல்காரராக வர ஒருவருக்கு பல வருடங்கள் பிடிக்கும். இதை இப்பிடியும் சொல்லலாம் .ஒருவர் வாய்க்கு ருசியாக சாப்பாட்டை தயார் செய்ய அவருக்கு பல நாட்கள் எடுக்கும். பல தடைவைகள் சமையல் செய்ய வேண்டும்.

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன.   இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த  விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறார். 

நடிகர் திலகம் சிவாஜியின் மகன்‌ யாழ். விஜயம்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினூடாக நேற்று(22) இலங்கையை வந்தடைந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆய்வு நூலின் வௌியீட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்

நெடுந்தீவு படுகொலைகள்: புங்குடுதீவில் ஒருவர் கைது

நெடுந்தீவு பகுதியில் சனிக்கிழமை (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். படுகாயங்களுக்குள்ளாகிய மற்றுமொரு வயோதிபப் பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பர்தா – 3

(MYM Siddeek)

பர்தாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் இனவாதிகளா (racists)?
மேற்படி கூற்றினை ஓர் ஆராய்ச்சிக்கான வினா (Research Question) வாக மட்டுமே முன்வைக்கின்றேன். இஸ்லாமோபோபியாவின் (Islamophobia) அறிகுறிகளில் ஒன்று தான் பர்தாவுக்கு எதிரான விமர்சனம்.

நவீன விவசாயத்திற்கு மாறத் தயங்கும் இலங்கை

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.
அறிமுகம்

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.