(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன.
(“முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா?” தொடர்ந்து வாசிக்க…)