அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.

(“அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாத இரவொன்றில் தனது நண்பருடன் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கோஷ்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அதன் பின்னர் அவரை மிக மோசமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

(“கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன.

(“மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்” தொடர்ந்து வாசிக்க…)

புத்தக வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15-20 ஆண்டுகளில் சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக அவ்வப்போது எழுதியவற்றில் ஒரு பகுதி நூலாக வெளிவருகிறது.
வெளியீட்டு நிகழ்வு 06-05-17 மாலை 4.00 மணி. திருமறைக்கலாமன்றம். (யாழ் பிரதானவீதி தண்ணீர் தாங்கி அருகே)

தோழமையுடன்
ஶ்ரீதரன்  -சுகு

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும்.

(“அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியின் பக்கம் நிரூபமா ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்‌ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார். அவருக்கு, மூன்றாவது வரிசையிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

(“மைத்திரியின் பக்கம் நிரூபமா ராஜபக்‌ஷ” தொடர்ந்து வாசிக்க…)

”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி!

(எஸ். ஹமீத்)

நேற்று திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதில், ”வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் எனக்கான கௌரவமாகவும் எடுத்துக் கொள்வேன்.” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை ”முடிவெடுப்பதில் கிம் ஜோங் உன் ஒரு மிடுக்கான நபர்!” என்றும் வடகொரியா அதிபரை டிரம்ப் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

(“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்” தொடர்ந்து வாசிக்க…)

‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’

“நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

(“‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)