(கருணாகரன்)
கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும் படுத்துறங்கவோ, ஒரு இடத்தில் ஆற அமர இருந்து, ஒரு காரியத்தைச் செய்யவோ முடியாது. வியர்த்துக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. களைத்துச் சோர்ந்து விடுகிறது உடல். மின்விசிறியில் அல்லது ஏஸியில் தஞ்சமடையவேண்டும் போலிருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமானதா?. நீருக்கடியில் போய் மூழ்கிவிடவேண்டும் போலிருக்கும்.
(“சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)