மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை

(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)

(அ.சாதிக் பாட்சா)

புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.

(“மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரன் அருகே கிடைத்துவிட்டாள் ‘சந்திராயன் – 1’

(ம.சுசித்ரா)

இந்தியாவின் முதல் நிலவு செயற்கைக்கோளான ‘சந்திராயன்-1’ஐ கண்டறிந்துவிட்டதாக நாஸா கடந்த வாரம் அறிவித்தது. எப்படித் தொலைந்தது நமது சந்திராயன் -1?

எங்கே போனது?

22 அக்டோபர் 2008-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திராயன் -1. நிலவின் தரைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக சுமார் ரூ. 525 கோடி செலவில் இது ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவையும் அடைந்து பல புதிய தகவல்களையும் கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிவந்தது. 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்தது. இரண்டாடுகள்வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டுக்குள் 2009 ஆகஸ்ட் 29 அன்று சந்திராயனின் தொடர்பு அறுந்துபோனது.

(“சந்திரன் அருகே கிடைத்துவிட்டாள் ‘சந்திராயன் – 1’” தொடர்ந்து வாசிக்க…)

மோடி ஓயாத அலையா?

இந்தியாவின் ஆகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாநிலமாக விளங்குவதன் காரணமாக அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல், ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் கவர்வதில் ஆச்சரியமில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள பெரும் வெற்றி, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு ஆதரவான சக்திகளுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

(“மோடி ஓயாத அலையா?” தொடர்ந்து வாசிக்க…)

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: உணவக உரிமையாளரின் உன்னத சேவை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பவர்ஹவுஸ் சாலையில் உள்ள, ‘ஏஎம்வி ஹோம்லி மெஸ்’ முன்பாக காலை, மதியம், மாலை என 3 நேரங்களிலும் வாடிய முகத்துடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள், மலர்ந்த முகத்துடன் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். ஒருவேளை உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமான உணவுதான் இந்த மலர்ச்சிக்குக் காரணம்.

(“ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: உணவக உரிமையாளரின் உன்னத சேவை” தொடர்ந்து வாசிக்க…)

போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்

சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.

(“போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன ஆதரவு வழங்கின. வவுனியா கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பேரணியாக சென்று தமது ஆதரவினை இவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இரோம் ஷர்மிளா ஷானு

2000-ம் ஆண்டு இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரத்தில் பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சில ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கியுடன் ஓடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரிழந்தனர். அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது.

(“இரோம் ஷர்மிளா ஷானு” தொடர்ந்து வாசிக்க…)

உதிர்கிறதா இரட்டை இலை?

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். மனைவி என்றாலும், எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதா 21 தொகுதிகளில் வெற்றிபெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

(“உதிர்கிறதா இரட்டை இலை?” தொடர்ந்து வாசிக்க…)

வியக்க வைத்த உ.பி. தேர்தல் முடிவு!

ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் நடந்தது. அந்த மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான தேசியப் பிரச்சினை என்று ஏதும் இல்லை. அந்த ஐந்தில் ஒன்று உத்தர பிரதேசம் எனும்போது, இனி 2019 மக்களவைப் பொதுத் தேர்தல் எப்படி இருக்கும் என்ற விவாதம் தொடர்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய மாநிலம் என்பதுடன் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது உத்தர பிரதேசம். இங்கு கிடைத்துள்ள வெற்றி பாஜக ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருதரப்புக்குமே மலைப்பாக இருக்கிறது.

(“வியக்க வைத்த உ.பி. தேர்தல் முடிவு!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை

 

படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில், பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில், ​மக்களின் பூர்வீகக் காணிகளையும் அடையாளம் காண முடியாதவாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசமானது, பொதுமக்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் பாடசாலை, கோயில், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளடங்கலாக, நான்கு கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.

(“கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை” தொடர்ந்து வாசிக்க…)