11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக புதிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு மாற்று சக்தியாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதில் தற்போது வரை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய 11 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் உதயத்தால் மீண்டும் புலிகள் அமைப்பு உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை அரசு உள்ளதாக தி இந்து ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என் தலைக்கு ரூ. 1 கோடி பரிசா? : மிரட்டலுக்கு பயப்படமட்டேன் என்கிறார் பினராயி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1கோடி பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகளின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குந்தன் சந்திரவாத் கூறுகையில், நான் தெரிவித்தது என்னுடைய சொந்த கருத்து என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்றார்.

பற்குணம் ( பகுதி 113 )

வட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் அழைப்பை ஏற்று பற்குணம் மீண்டும் மாகாண சபைக்குத் திரும்பினார்.பற்குணத்தின் பாதுகாப்புக்கும் அவரே உத்தரவாதம் அளித்தார். பற்குணம் குடியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புலிகளின் புலனாய்வுத்துறை அள்ளிச் சென்றுவிட்டது.அவருடைய மகளின் சிறுவயது சம்பாசனைகள் பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கூட புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.எதுவும் மிஞ்சவில்லை.

(“பற்குணம் ( பகுதி 113 )” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 112 )

நான் 1989 புரட்டாசி மாதம் கனடா வந்துவிட்டேன்.அதன்பின்பாக இலங்கை இந்திய அரசியலில் முறுகல் நிலை தொடங்கியது.புலிகளும் பிரேமதாசாவும் தேன்நிலவு கொண்டாட மாகாண சபை நிலைமை கேள்விக்குறியானது.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய படைகள் வாபஸ் உறுதியானது.

(“பற்குணம் (பகுதி 112 )” தொடர்ந்து வாசிக்க…)

பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் ஒரு பேரவை உறுப்பினராக சிவசேகரம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நலன்களை ஒதுக்கி செயற்பட்டுவருவது யாழிலிருந்துவரும் நம்பகரமான செய்திகளாக இருக்கிறது. 2015 சனவரியில் மைத்திரி சனாதிபதியானபின் டக்களசின் கைப்பாவைகளாக இருந்த பேரவை உறுப்பினர்கள் கலைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி சிபார்சு செய்த பெரும்பாலான படித்த நேர்மையானவர்கள் பேரவை உறுப்பினர்களாக்கப்பட்டார்கள்.

(“பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 111 )

இதை இடைச் செருகலாக எழுதுகிறேன்,

எனது சகோதரன் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே அந்தகர கட்சியின் செயற்பாட்டாளர் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார்.

இவர் 1982 இல் திருமணம் முடித்தார்.இந்த திருமணத்துக்கு சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினத்துக்கும் அழைப்பு வைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.இதுஅவருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.ஆனாலும் நவரத்தினத்தை பகைக்க விரும்பவில்லை.இவரின் அரசியல்போக்கு அப்படி இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

ஒருநாள் தருணம் பார்த்து நவரத்தினத்திடம் தனது திருமணத்துக்கு ஏன் வரவில்லை என வினாவினார்.அதைக் கேட்ட நவரத்தினம் சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை பைலிருந்து எடுத்து என் சகோதரனிடம் கொடுத்து படிக்கக் கொடுத்தாராம்.அதைப் படித்துவிட்டு வந்து சமாதானமான என் சகோதரன் சிரித்துக்கொண்டே சொன்னார் அண்ணை நிற்கிற இடத்தில் எம்.பி வரமாட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இக் கடிதம் பற்குணத்தால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் எழுதப்பட்டது.அதற்குப் பதிலளிக்காமல் ஆனால் பத்திரமாக அவ்வளவு காலம் வைத்திருக்கிறார்.அன்றைய நிலையில் நான் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

இது 1966-69 காலத்தில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.இக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் எம்.பிகளான நவரத்தினம்,அமிர்தலிங்கம்,செல்வநாயகம் ஆகியவர்களின் தொகுதிகளிலேயே தீண்டாமைக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக நடந்தது.இதன, காரணமாகவே தமிழரசுக்,கட,சியை அதிகம் வெறுத்தார்.அவர்கள் காட்டிய மௌனம் சந்தர்பவாதம் அப்படி.அதன் காரணமாக நவரத்தினத்தை கேள்வி கேட்டு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.அதுவும் அவ்வளவு காலமும் பத்திரப்படுத்தி வைக்குமளவுக்கு முக்கியம் என்ன? அந்த கடிதம் பற்றி நானும் பற்குணத்திடம் விசாரிக்கத் தவறிவிட்டேன்.

ஆனால் பற்குணம் திருமண வீட்டுக்கு வந்தவரிடம் அரசியல் பேசமாட்டார்.நவரத்தினத்தின் பயம் தேவையற்றது.மேலும் போகவிட்டு புறம் சொல்லும் குணம்கூட அவரிடம் இல்லை.அப்படி யாராவது சொல்வதும் பிடிக்காது.யாரெனினும் நேரே சொல்லவேண்டும் என்பார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)

வரவேற்போம்.

கேப்பாபுலவு மக்கள் போராட்டம் பிலகுடியிருப்பு (பகுதியாகவோ முழுமையாகவோ) காணிகளை விடுவிப்பதில் வெற்றிகண்டுள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கதைசொல்கிற அரசியல் வாதிகளினது பலத்தை விடவும் தமது பலத்தை நம்பியிருக்கிறார்கள் இந்த மக்கள்.

(“வரவேற்போம்.” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு: புதிதாகவே வரும்….? திருத்தம்தான் வரும்…..?

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து​ தெரிவிக்கையில்,

(“அரசியலமைப்பு: புதிதாகவே வரும்….? திருத்தம்தான் வரும்…..?” தொடர்ந்து வாசிக்க…)

‘கேப்பாப்புலவுமுகாம் இருக்கும்’

“முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி, உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(01) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மக்களின் காணிகள் இன்று (நேற்று) விடுவிப்பதாக கூறப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். தனக்கு அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் படி, 42 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அங்குள்ள விமானப் படை முகாம் அகற்றப்படமாட்டாது, பலாலி பகுதியில் எவ்வாறு படையினரும் பொதுமக்களும் இணைந்ததாக இருக்கின்றனரோ, அதனைபோல இங்கேயும் இருப்பர்” என்றார்.

மரண அறிவித்தல்

திரு நோபேட் ஞானப்பிரகாசம்
தோற்றம் : 2 சனவரி 1947 — மறைவு : 24 பெப்ரவரி 2017
”இறைவன் கரங்கள் எந்தன் உறைவிடமானது”
யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நோபேட் ஞானப்பிரகாசம் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று விண்ணகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சவிரியம்மா(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யேசுதாசன், அக்னெஸ்(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி எலிசபெத்(வயலற்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாதனா, டிலெக்ரா, சப்றீனா நோவெல்ரா(றீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எட்வேட் குயின்ரன்(நிக்சன்), செல்வநாயகம் மதன்சிங்(மதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மில்லியானா, றொனால்டோ, ஷாறா, றிதன், மாவின், சாம்சன் வருண், அலெக்ஸ்சாந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதியாத்திரைத் திருப்பலி 04-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Propsteikirche, Klosterstraße 1, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அனைவரும் Bürgerschützengesellschaft, Promenade 18, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +49293121595
ஜஸ்மின் பரிமளராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +4917179909410
நிக்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915233634201
றீனா மதன் — நோர்வே
தொலைபேசி: +4747413163
றொனால்டோ — ஜெர்மனி
தொலைபேசி: +491632886552
நந்தினி கயின்ஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623546514
வருண் — ஜெர்மனி
தொலைபேசி: +4915730250656 ஸ்ரெபான் — ஜெர்மனி தொலைபேசி:+491776813862