ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ சாதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க புலானாய்வு இயக்குனர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று அமெரிக்க புலானாய்வுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் சிஐஏ உட்பட ஒட்டுமொத்த புலானாய்வுத் துறையின் இயக்குனராக நியமிக்கப்படவுள்ள டான் கோட்ஸ் செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இந்தியா ஒரு ராக்கெட்டின் மூலம் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.

(“ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ சாதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க புலானாய்வு இயக்குனர்” தொடர்ந்து வாசிக்க…)

நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்!

(எஸ். ஹமீத்)
அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்குப் போய் வருவார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் நிலாவுக்குச் செல்வது முதன் முறையாக நிகழவிருக்கிறது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நேற்று ஊர்ஜிதம் செய்துள்ளது.

(“நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்!” தொடர்ந்து வாசிக்க…)

‘எமதுசமூகம் -கனடா’ ஆரம்பகலந்துரையாடல்

‘எமதுசமூகம் – கனடா’ கடந்த ஜனவரி 13ந்திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி 10ந்திகதி முதல் இயங்கும் ‘எமதுசமூகம் – கனடா’ WhatsApp குறூப்பினை ஒரு கட்டமைப்பாக ஒழுங்கமைத்து கிழக்கில் இடம்பெறும் சவால்களையும் தேவைகளையும் எவ்வாறு ஒன்றாக இணைந்து நிபர்த்தி செய்யலாமெனவும் சிறுதொழிற்சாலைகள் அல்லது காணிகளை வாங்கி அதில் பயன்பெறுவதற்குமான ஒரு திட்டத்தினையும் வகுக்கலாம் எனஎண்ணியுள்ளோம். அதனடிப்படையில் கிழக்கிலங்கையின் நமது நிலம், பொருளாதாரம், கல்வி, பதவி போன்றவற்றில் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பன போன்ற ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தவுள்ளோம். இங்குபலர் மண்ணிற்கும் மக்களுக்குமாக பணியாற்றிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. எனவே எமதுசமூகத்திற்கு பயனுள்ள ஆலோசனைகளை கலந்துரையாட உங்களை அழைக்கின்றோம்.  மேலும் எமது சமூகம் கனடா WhatsApp இல்உங்கள் நண்பர்கள் விரும்பின் பெயர் WhatsApp இலக்கத்தையும் தந்தால் இணைத்துக்கொள்ளலாம்.
Meeting Date: March – 5th Sunday Time: 2.00 PM Place: Etobicoke Civic centre # 399 – The West Mall (427 & Burnhamthope)
நன்றி.

பற்குணம் (பகுதி 110 )

பற்குணம் மறுநாள் மதியம் போல என்னைக் காணவந்தார்.என்ன வரமாட்டேன் என்றாய் இப்போது வந்திருக்கிறீர்கள் என்றேன்.அந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அமிர்தலிங்கத்தையும் அந்த கட்சியினரையும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டி இருப்பதால் ரத்து செய்துவிட்டனர் என்றார்.

(“பற்குணம் (பகுதி 110 )” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

(முன்னாள் ஈபிஆர்எல்எவ், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கனடா பொறுப்பாளரும் இன்னாள் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி இன் ரொரன்ரோ பொறுப்பாளர் ஏ.கே.ஆனந்தன் அவர்களின் மனைவியின் தாயார் இவர்)

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நவரட்ணம் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், புவனேஸ்வரி, கமலாவதி(இலங்கை), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி, சிவா, ஞானேஸ்வரி, லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா, நகுலேஸ்வரி, குமரேசன், சிவபாக்கியலட்சுமி, வெற்றிவேல், சீலி, ஆனந்தன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
தொலைபேசி: +94215101259
பஞ்சலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +49775602849
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14166692687
லோகேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +16478473635

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு

‘லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சியை சென்னையில் அண்மையில் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இப்புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்காக சென்னையில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் கட்சியின் தலைமை அலுவலகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கட்சி தொடங்கிய இரு நாட்களில் ஆன்-லைன் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகி உள்ளனர்.

(“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?

(சாகரன்)

டிரிஎன்ஏ(DTNA), தமிழ் மக்கள் அரங்கம் போன்ற முயற்சிகள் நடைபெற்றதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும். இவை பலமான ஐக்கிய முன்னணிகளாக முன்னேறாதற்குரிய காரணங்களையும் இங்கு நாம் இதயசுத்தியுடன் ஆராயவேண்டும் இவை பெரும்பாலும் முன்னாள் விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வுகளும் இதற்கான சில சுழிகளே. ஏன் 2009 மே இற்கு பின்னரான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வருவதற்கானவாய்புக்கள் நிறையவே இருந்தன.

(“முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்துப் பாடகர் சாந்தன்

ஈழத்துப் பாடகர் சாந்தன் அவர்கள், காலமான செய்தி கவலை தந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பாடகராகவே அவரை நான் அறிந்திருந்தேன். அவரின் குரலில் வெளிவந்த எந்தவொரு பிரச்சார பாடல்களையும் , நான் முழுமையாகக் கேட்டவன் அல்ல. அவரின் குரல் என்னை கவர்ந்திருந்தபோதிலும், பாடல்களின் பிரச்சார சொல்லாடல்கள் என்னை அந்நியப்படுத்திக் கொண்டே இருந்தது.

(“ஈழத்துப் பாடகர் சாந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டுள்ளார்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

(“கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!

(எஸ். ஹமீத்)

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி…யார் இந்தச் சயனைட் மல்லிகா…?

(“சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!” தொடர்ந்து வாசிக்க…)