யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 காவாலிக் குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(“யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

(“எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆப்பிரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் விளக்கமளித்தனர்.

(“ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’

“சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பது இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு, கொலை அச்சுறுத்தல் மற்றும் முன்னாள் போராளிகள் கைது குறித்துக் கேட்ட போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

(“‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’” தொடர்ந்து வாசிக்க…)

ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !

தனக்காகத் தீச்சட்டி ஏந்தும் பாமரத் தமிழன் தொடங்கி உச்சநீதி மன்ற நீதிபதி முடிய அனைவரையும் விலைக்கு வாங்க முடியும் என்பதைத் தனது அரசியல் வாழ்க்கை நெடுகிலும் நிரூபித்திருக்கிறார், ஜெயா.

மறுமொழிகள்
1
‘‘நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’ (ஜெயா தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி − ஆனந்த விகடன், 14.12.16)
‘‘அரசு நிர்வாகத்தில் தெளிவான பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டவராக ஜெயலலிதா இருந்தார். (அவரது மறைவு) நிர்வாகத் திறன் கொண்ட அரசாங்கத் தலைமைக்கான இடத்திலும் வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதே உண்மை.’’ (துக்ளக், 21.12.16)

(“ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !” தொடர்ந்து வாசிக்க…)

மக்களை நேசித்த மனிதன்

டாக்டர் குழைக்காதன், தமிழின பாதுகாப்பு மையம்

அன்றொரு நாள் என்னுடைய பல வருடகால வக்கீல் நண்பரை சந்திக்க அவருடைய இடத்திற்குச் சென்றேன். ஜன்னலைக் கடந்துசெல்லும்போது நண்பர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். ஜன்னலின் ஊடாக என்னைப் பார்த்து குட்மார்னிங் என்றுஒரு குரல் ஒலித்தது. நான் படிகளைக் கடந்து உள்ளே சென்றபோது அங்கு நண்பர் இல்லை. ஆனால் நான் சிறிதும் எதிர்பாராத வகையில்அங்கு தோழர் க. பத்மநாபா அமர்ந்திருந்தார்.

(“மக்களை நேசித்த மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த…….!

“நடைமுறையில் தேசிய அரசாங்கம் என்பது இல்லை. தேசிய அரசாங்கம் என்று சொல்வது பம்மாத்து. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இருபெரும் சிங்கள கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது தேசிய நல்லிணக்க அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க கூடாது என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பம்மாத்து.

மைத்திரி – ஜனாதிபதி
ரணில் – பிரதமர்
சம்மந்தர் – எதிர்கட்சித்தலைவர்

இந்த கூட்டு, சீன சார்பு மகிந்தவை அகற்றுவதற்கு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச்தி

மைத்திரி – தனது கட்சிக்கும் விசுவாசமாக இல்லை நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை

ரணில் தன் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை

சம்மந்தர் தன் மக்களுக்கு விசுவாசமாக இல்லை

மூவரும் விசுவாசமாக இருப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கே

சுயத்தை தொலைத்த இவர்களால் நல்லிணக்கத்தையும் கொடுக்க முடியாது நல்லாட்சியையும் கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் கொடுக்க முடியாது. இவர்கள் மூவரையும் ஓரணியில் வைத்திருப்பது அமெரிக்கா அங்கு நிலை மாறினால் இங்கு நிலை தடுமாறும் புதிய அரசியல் அமைப்பு சாசனம் என்பது கானல் நீராகவே போகப்போகிறது

இலங்கையின் அரசியல் அமைப்பு சாசன திருத்தத்துக்கு உண்மையாகவே உழைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்காவே. அவர் சுதுநிலமே அமைப்பை உருவாக்கி புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஏற்கப்பண்ணுவதற்கான முன்முயர்சிகளை உளமாரவே முன்னெடுத்தார். அதனை சரியாக பயன்படுத்தாது விட்டமை புலிகள் செய்த முட்டாள் தனம். அன்று உயிருக்கு பயந்து சம்மந்தரும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை இன்று சந்திரிக்கா பல் புடுங்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மகிந்தவை பழிவாங்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியுள்ளது.

தனது கூட்டமைப்குக்கு உள்ளேயே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க முடியாத, தானே அரசியலுக்கு கொண்டு வந்த விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் இணைத்து வைக்க தெரியாத சம்மந்தனா மகிந்தவை சமாதானப்படுத்த போகிறார் இவரா பெளத்த மட பீடங்களை அணுகி சமாதானபடுத்த போகின்றார்.

இவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு political will வேண்டும் அது இவர்கள் மூவரிடமும் இல்லை. மகிந்தவிடம் அது இருந்தது. அந்த political will தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இன்றும் தினமும் சராசரியாக 100 பேர் என்னத்துக்கு என்று தெரியாமல் இறந்து கொண்டே இருப்பார்கள். தற்போதைய இலங்கை ஒரு சமூக ஜனநாயக புரட்சிக்கான தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்த எந்த அரசியல்வாதிகளும் அதனை முன்னெடுக்கப் போவதும் இல்லை மாற்றத்தை கொண்டுவர போவதும் இல்லை. அதற்கான தேவை சிங்கள மக்களை தவிர தமிழ்மக்களுக்கே மிக மிக அவசியமாக உள்ளது ”

(Valavan)

தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பூமி, சூரியனைச் சுற்றுவதோடல்லாமல் தன்னைத் தானேயும் சுற்றி வருகிறது. அதேபோலவே, நிதி மூலதனமும் புதிய புதிய வழிகளில் தனக்கான போக்கிடத்தைத் தேடினாலும் செல்லக்கூடிய இடங்கள் மட்டுப்பாடானவை. இதனால், செல்வதற்கான வழிகளை அது மாற்ற வேண்டி ஏற்படுகிறது. இது இயற்கை நிகழ்வல்ல. தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகும் உலக அரங்கில், இது தவிர்க்கவியலாததாகிறது. அதேபோல, ஏற்படுகின்ற நெருக்கடிகள் இம்மாற்றங்களை விரைவுபடுத்துவதோடு குழப்பத்துக்கும் நிச்சயமின்மைக்கும் ஆளாக்குகின்றன. இதுவே இப்போது நடந்தேறுகிறது.

(“தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்” தொடர்ந்து வாசிக்க…)

டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு

உட்பட, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட் விதித்த தடையை நீக்க, மேல்முறையீட்டு கோர்ட் மறுத்துள்ளது. அமெரிக்க அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப், ஈராக், ஈரான், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்,
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.

(“டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)