தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை

மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. ‘பசிக்கு எதிரான செயற்பாடு’ அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

(“தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து. ஒரு நாட்டின் மொத்த‌ பொருளாதார‌ உற்ப‌த்தி (GDP) மொத்த‌ க‌ட‌ன்க‌ளை விட‌ குறைவாக‌ இருந்தால், பொருளாதார‌ தேக்க‌ம் உண்டாகும். இதுவே கிரேக்க‌ நாட்டிலும் ந‌ட‌ந்த‌து. இல‌ங்கையின் த‌ற்போதைய‌ நில‌வ‌ர‌ப் ப‌டி GDP தொகை: US$ 75 பில்லிய‌ன் டாலர். ஆனால், மொத்த‌ க‌ட‌ன் தொகை $81 பில்லிய‌ன் டால‌ர். அதாவது உற்ப‌த்தியை விட‌ க‌ட‌ன் அதிக‌ம். அத‌னால், அர‌சின் வ‌ருமான‌த்தின் 94% க‌ட‌னைக் க‌ட்டுவ‌த‌ற்கே செல‌விட‌ப் ப‌டுகின்ற‌து.

(“இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் மறு எழுச்சியா?

‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

(“மஹிந்தவின் மறு எழுச்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..

ஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

(“ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.” தொடர்ந்து வாசிக்க…)

புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல உதவினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான 48 வயதான Hamid Reza Jafary என்ற நபர் தாய்லாந்துக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சில ஆயிரம் டொலர்களுக்காக போலியான கடவுச்சீட்டுக்களைத் தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் போன்றோருக்கு வழங்கியுள்ளதாக ஏபி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

(“புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி: sooddram3@gmail.com

வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது.

(“வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு” தொடர்ந்து வாசிக்க…)

“பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததுள்ளார்.

(““பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்கள் கோரிக்கை

அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை, கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்களும் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என, கிளிநொச்சி வாழ் மலையக மக்கள், இன்று வெள்ளிக்கிழமை, நல்லிணக்க பொறிமுறை செயலணிக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

(“மலையக மக்கள் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)