சோசலிச கட்சியினர் மூவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி, புஞ்சி பொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், திணைக்களத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட குறித்த மூவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(“சோசலிச கட்சியினர் மூவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியமைத்திருக்கின்ற விவகாரம், இலங்கையிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் வெற்றிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

(“சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” தொடர்ந்து வாசிக்க…)

மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடிதமொன்றை அனுப்பி வத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் அனுப்பிவைத்துள்ள கடித்தத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னைச் செல்லவிடாமல் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. பெற்றுள்ளது. தி.மு.க. சட்டசபை தலைவராக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஜூன் 3ம் திகதி முறைப்படி வெளியாகிறது.

(“எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யார் குற்றினால் அரிசி ஆகும்?

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது எமது வடக்கின் அரசியல் களம். ஆடம்பரமான மேடை, கொடி, குடை, ஆலவட்டத்துடன் மேளதாள பவனியில் மேடையேறியவருக்கு கிரீடம் [அழகு ராணிகளுக்கு சூட்டும் பாணியில்] கையில் வேல் [வினைதீர்க்க வந்தவர் என்பதாலா?] அமைந்தது தமிழர் அரசு! என்ற உதயன் பத்திரிகை தலையங்கம், தீர்ந்தது எம் தாகம்! எனும் இறுமாப்புடன் அமைந்தது கைதடியில் வட மாகாண சபை. தேர்வு செய்த இடமே அதன் எதிர்காலம் பற்றி சூட்சுமமாய் ஒரு சேதி சொன்னது. எம் கடைசி காலத்தில், பேசிப் பேசியே காலத்தை கடத்தி ஓய்வெடுக்கும் பராமரிப்புடன் கூடிய வயோதிபர் மடம், மற்றும் நாட்டு வைத்தியம் [ ஆயுர்வேதம்] பார்க்கும் வைத்திய சாலை என்பன, ஏற்கனவே அமைந்த இடம் கைதடி. நாள்பட்ட நோய்க்கு எம்மவர் தேர்வு ஆயுர்வேதம். அதே போல் நீண்ட நெடிய தீராத எம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வந்த வட மாகாண சபை, அமைந்த இடமும் கைதடி. இருந்தும் நோய் தீரும் போல் தெரியவில்லை. அதேவேளை பராமரிப்புடன் கூடிய ஒய்வு பல உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது மட்டும் களநிலை. மக்களுக்கு என்ன கிடைத்தது, கிடைக்கும் என்ற கேள்விக்கு அவர்களின் பதில் Wait & See. [இறுதியில் அணில் ஏற விட்ட நாலு கால் நண்பர்களின் நிலையே மக்களுக்கு வரலாம்].

(“யார் குற்றினால் அரிசி ஆகும்?” தொடர்ந்து வாசிக்க…)

“வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”

“வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்” என்று கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் சிலாகித்துக் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் சொல்லி இருந்தார். ஆனால் தெரிவு செய்யப்பட்ட நசீர் ஹாபீஸ் ( ஜைனுலாப்தீன் நஷீர் அஹமட்- ஹாபீஸ் என்பது அவரின் குடும்பப் பெயர் அல்ல) விக்னேஸ்வரன் போல் கற்றவரா , அல்லது ஜமீல்தான் அவரைப்போல் கற்றவரா என்ற கேள்விகள் ஒப்பீடுகள் எல்லாமே அபத்தமானவை!. இந்தியக் கண்டத்தை ஆளும் மோடி என்ன முதுமானியா , அல்லது இலங்கை ஜனாதிபதி மைத்ரி என்ன பட்டதாரியா ? . ஆனாலும் ஜமீலும் நசீரும் ஏதோ ஒரு விதத்தில் பட்டதாரிகள் .

(““வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு ” தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் செய்திருக்கிறார் முதல்வர் நசீர் அஹ்மட் மே 20ம் தேதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்யாலயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை அடுத்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை இனி முப்படைகளும் புறக்கணிப்பார்கள் என்று கடற்படை அதிகாரிகள் கூறினர். இந்த சர்ச்சையை அடுத்து இரு தரப்புகளையும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க விளக்கம் கோரியிருந்தார்.

(“முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 39)

அம்மா பற்குணத்தின் திருமணத்தின் பின் மந்துவிலில் இருப்பேன் என்றார்.அம்மா அதிகம் படிக்காதவர் .ஆனாலும் கூட்டுக்குடும்ப வாழ்வு அவருக்கு விருப்பம் இல்லை.அம்மா தன் தாய்,சகோதரர்களுடனும் அப்படித்தான் வாழ்ந்தார் .அம்மாவின் கருத்து சரி என்றாலும் பற்குணம் அம்மாவைவிட விரும்பவில்லை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 39)” தொடர்ந்து வாசிக்க…)

வார்த்தை தவறிவிட்டாய்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் முன்னிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை அவமதித்ததாக, ஒரு பெரும் சர்ச்சை இப்போது சூடுபிடித்திருக்கின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாட்டைச் சரி எனக் கூறி ஒரு சிலரும், அவரது செயற்பாட்டைக் கண்டித்து அதிகமானோரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி, இது தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து எதையும் வெளியிடாத நிலையில், முதலமைச்சர் நஸீர், தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். பிராந்தியம் கடந்து, ஒரு தேசியப் பிரச்சினையாக இது ஆகியிருக்கின்றது அல்லது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

(“வார்த்தை தவறிவிட்டாய்” தொடர்ந்து வாசிக்க…)

வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்

தமிழகம் மற்றும் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திப்பதற்கு நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(“வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்” தொடர்ந்து வாசிக்க…)