கியூபாவில் தனியார் வர்த்தகத்திற்கு அனுமதி

சிறிய மற்றும் மத்திய அளவான தனியார் வர்த்தக துறைக்கு கியூப அரசு அனுமதி அளித்துள்ளது. பிடெல் காஸ்ட்ரோவுக்கு பின்னர் 2008இல் ஜனாதிபதி பதவியை ஏற்ற அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டில் அறிமுகப்படுத்திய சீர்திருத்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேக்கம் கண்டிருக்கும் கியூப பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த ராவுல் காஸ்ட்ரோ முயன்றபோதும் அதற்கு கியூப கொம்மியுனிஸ கட்சியின் கடும்போக்காளர்களிடம் எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான உறவை மீள ஆரம்பித்த கியூபா, நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. முடி திருத்துவது தொடக்கம் உணவகங்கள் வரை தற்போது பல்வேறு தொழில் துறைகளிலும் சுய வேலைவாய்ப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘சி.வி.க்கும் நஸீருக்கும் ஒருவகை நோய்’ – விமல் வீரவன்ச

‘வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர், ஒரு வகையான நோய் தொற்றிக் கொண்டுள்ளது’ என்று, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி.யான விமல் வீரவன்ச தெரிவத்தார்.

(“‘சி.வி.க்கும் நஸீருக்கும் ஒருவகை நோய்’ – விமல் வீரவன்ச” தொடர்ந்து வாசிக்க…)

துக்ளக் இல் வெளி வந்த கட்டுரை பற்றி….

எத்தனையோ கட்டங்களில், எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். புலிகளால் இலங்கைக்கு நல்ல தீர்வு எந்தக் காலத்திலும் அமையாது .ராஜபக்ஷவை ஜெயிக்க வைத்த தமிழர்கள்!இலங்கையில் துக்ளக் இந்தக் கட்டுரைத் தொடர் திட்டமிட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் எழுதப்படுவதாகச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். முதலில் இந்தக் கட்டுரைத் தொடர் உருவான பின்னணியை அவர்கள் தெரிந்து கொள்வது நலம்.

(“துக்ளக் இல் வெளி வந்த கட்டுரை பற்றி….” தொடர்ந்து வாசிக்க…)

‘சிங்களத் தலைவர்களே சமஷ்டியைக் கோரினர்’

சமஷ்டி முறையானது, நாட்டைப் பிரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், சமஷ்டியை முதலில் முன்வைத்தவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். தமிழர் இந்த நாட்டின் தேசிய இனத்தவர். அவர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும். அதற்கு நாட்டுக்குள் சமஷ்டித் தீர்வு அவசியமானது’ என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

(“‘சிங்களத் தலைவர்களே சமஷ்டியைக் கோரினர்’” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பதிவு 35)

நான் அம்மாவோடு படுப்பவன்.நித்திரை வரும்வரை பற்குணத்தோடு படுப்பேன்.அப்போது அவர் அறையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. அது யார் எனக் கேட்டேன். இதுதான் பெரிய அண்ணி மாதிரி உனக்கு சின்ன அண்ணி என்றார்.எனக்குப் புரியவே இல்லை. மறுநாள் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா எதுவும் சொல்லவில்லை .

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பதிவு 35)” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்

இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்படஇ 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம் ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில் ஐ.எஸ்.இ பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

(“ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’

முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.

(“‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)

3 அமைச்சுகள் சி.வி. வசமாகின

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக்கொண்டார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி., வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

(“3 அமைச்சுகள் சி.வி. வசமாகின” தொடர்ந்து வாசிக்க…)

மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், உள்ளிட்ட அமைச்சரவை செயலாளர்கள், முப்படைத் தலைவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

(“மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்தும், 500 கடைகளை மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு மதுவிலக்கு கோரி நீண்ட போராட்டம் நடத்தி வரும் பல்வேறு தரப்பினரும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் சாதக, பாதங்களையும், கூடுதலான கோரிக்கைகளையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

(“தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)