உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார் என்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

LTTE இன் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் அரசியல் பிரிவு முன்னாள் பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எல்லைகளற்ற உலகம் ??

(சுகு-ஸ்ரீதரன்)

உலகின் பெருமளவு யுத்தங்கள் அகதிகள் நெருக்கடிகளுக்கு வடஅமெரிக்கா ஐரோப்பாவின் பலம் பொருந்திய நாடுகள் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும். எல்லைகள மூடிவிட்டு தனிக்கிரகமாக ஐரோப்பா வட அமெரிக்கா இருந்த விட முடியாது. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ேற்கொண்ட விபரீத விளையாட்டின் பிரசவம் தான் ஐரோப்பாவில் வழிநெடுக அகதிகள் குவிந்திருப்பது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் இதனைப் பொருத்தி பார்க்கலாம். தேசிய இனப்பிரச்சனையினதும் சர்வதேச ஆயுத வியாபாரத்தின் ஒரு ஒரு பகுதியாகவும் இலங்கையின் வடக்கு கிழக்கை வமையமாக கொண்ட யுத்தம் கொழுப்பு மொரட்டுவ தொடக்கம் வத்தளை யாஎல நீர் கொழும்பு ஈறாக தமிழர்களை நெரிசலாக கொண்ட பிரதேசங்களாக மாற்றின.

(“எல்லைகளற்ற உலகம் ??” தொடர்ந்து வாசிக்க…)

அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?

 

உரும்பிராய் இந்துக் கல்லூரி பின்னால் மேற்கே சட்டத்தரணி தியாகலிங்கத்தின் வீடு உள்ளது. தியாகலிங்கம் குடும்பத்தினர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் நீண்ட காலமாக வசித்து வந்தார். அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அந்த வளவிற்குள்தான் குடியிருந்தனர்.

(“அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?” தொடர்ந்து வாசிக்க…)

இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன. பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

(“இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நாட் சம்பளமாக ரூபா. 1000/= பெறக்கூடிய ஒரு முறையை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டு அது தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் அந்த முறையை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தது. அந்த முறை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்க உடன்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கங்களும் அதனை பகிரங்கப்படுத்தாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பள முறை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

(“நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6

(மாதவன் சஞ்சயன்)

இரவு உண்ட இலவச பழங்களின் அனுசரணையில் வயிறு காலை 5 மணிக்கே அலாரம் அடித்தது. கூடவே அப்பத்துடன் உண்ட வெங்காய/மிளகாய் சம்பல் தன் பங்களிப்பை செய்யத் தொடங்கியது. இணைந்த குளியல் மற்றும் வசதி கொண்ட தனி அறையில் தங்கியதால், அடுத்தவரை சிரமப் படுத்தாமல் காலை நடவடிக்கைகள் முடித்து கீழ் மாடியில் இருந்த உணவகம் சென்றேன். 6 மணிக்கே இட்லி வடை சாம்பார் என அசத்தினார், அதனை அண்மையில் குத்தகை எடுத்த கண்டி தமிழர். என்னதான் தமிழருடன் முரண்பாடு வந்தாலும் சிங்களவருக்கு, இட்லி வடை தோசை சாம்பாறு என்றால் அலாதிப் பிரியம் என்பதை அறிந்து கொண்ட அவரின் உணவகத்துக்கு, அயல் விடுதிகளில் தங்குபவர்கள் கூட உணவுக்காக, அதிகாலையே வருவதைக் கண்டேன்.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6” தொடர்ந்து வாசிக்க…)

விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்றதோர் அபிப்பிராயம் தலைதூக்கி, சிறிது சிறிதாக மறைந்து போகும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. கொட்டதெனியாவ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்திக் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அபிப்பிராயம் இம்முறை தலைதூக்கியது. இதற்கு முன்னரும் இதுபோன்ற படுபாதகச் செயல்கள் இடம்பெற்ற போதும், இதேபோல் குற்றவாளிகள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தலைதூக்கியது. பின்னர் சில நாட்களில் அது மாயமாய் மறைந்துவிட்டது.

(“விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்” தொடர்ந்து வாசிக்க…)

வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “போலியான வாக்குறுதிகளை வழங்கி சிறைக் கைதிகளை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இவ்வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களேயுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கைதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார்செய்ய எனக்கு இக்காலப் பகுதியை அவகாசமாக தாருங்கள்” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(“வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)