ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

(“ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

(“யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை

நெத‌ர்லாந்தில், பொருளாதார‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌, வேலையில்லாப் பிர‌ச்சினை நில‌விய கால‌த்தில், இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் த‌பால்கார‌ர் வேலை செய்து வ‌ந்தேன். அப்போது என்னுட‌ன் ஒரு க‌ன‌டிய‌ (வெள்ளையின‌ப்) பெண்ணும் வேலை செய்தார். க‌ன‌டா ப‌ற்றி அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌ன‌.

(“கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

(“உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

(“முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கும் கிழக்கும்

இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.

(“வடக்கும் கிழக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

(“தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் உள்ள‌ அதிச‌ய‌ப் ப‌ட‌த்த‌க்க‌ ஒற்றுமை ஒன்றுள்ள‌து. இர‌ண்டையும் உருவாக்கிய‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள். சிங்க‌ள‌த் தேசிய‌ பிதாம‌க‌ர்க‌ளான‌ அந‌காரிக‌ த‌ர்ம‌பாலா, டி.எஸ். சேன‌நாய‌க்க‌, ப‌ண்டார‌நாய‌க்க‌, ஜெய‌வ‌ர்த்த‌ன‌ எல்லோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். அத்துட‌ன், சிங்க‌ள‌த்தை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேச‌த் தெரிந்திருந்த‌ன‌ர்.

(“ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை” தொடர்ந்து வாசிக்க…)

தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்

(டி. சக்திய சிவா)

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்…

தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..

(“தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்” தொடர்ந்து வாசிக்க…)

India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…

(By Keith Jones)

Four days after India conducted “surgical” military strikes inside Pakistan-held Kashmir, South Asia’s rival nuclear-armed states continue to teeter on the brink of war. There have been hours-long artillery and gun-fire exchanges across the Line of Control (LoC) that separates Indian- and Pakistani-held Kashmir each night since India sent troops and helicopters into Pakistan and inflicted “double-digit” casualties.

(“India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…” தொடர்ந்து வாசிக்க…)