என் மாமா…

(கமலாகரன்)

 

ஈழவிடுதலைப் போராட்டம் தந்த ஒப்பற்ற உறவு.
தேசத்தின் அனர்த்தங்கள் விளைவித்த நாசம்… நேசம் துறந்து உறவுகளைப் பிரிந்து தமிழகம் வந்தேன்.
வாராது வந்த மாமணியாய் வந்தாள் என் வாழ்வில் ஒரு சமூகவிடுதலைப் போராளிப் பெண்.
எல்லாம் இழந்த மனோ நிலையில் ஒரு மன நோயாளிபோல் வாழ்ந்து திரிந்த என்னை தன் துணையாய் ஏற்க முன் வந்தாள்.
நான் யார். என் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் நான் சொல்லாமலே எல்லாம் அறிந்திருந்தாள் முன்கூட்டி என்னைப் பற்றி.
திருமணம் வரை நகர்ந்த எம்முறவில் முதன் முதலில் என் மாமனாரை பார்த்தது என் திருமணத்தன்றுதான்.

(“என் மாமா…” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான்.இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு.அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள் ,வயல்கள் ,காடுகள், தென்னம் தோப்புகள் ,தோட்டங்கள் ஆறுகள் ,சிறிய குளங்கள் ,கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை. அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…

 

தெற்கிலிருந்து இந்தக் கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல்.

(“யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் கனடாவில் எழுமா.???

நான் எனது சமுத்துவமற்ற, சகோதரத்துவமற்ற, சமுதாயத்திற்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகள் அல்ல, அவை எச்சரிக்கையுமல்ல, அவற்றால் எந்தப்பயனுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் நமது மக்கள் நம்மைப் பற்றி அறியவேண்டிய பல உண்மைகள் நிறைய உள்ளன என்பதை ஆணித்தரமாக அடித்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்..

(“எழுக தமிழ் கனடாவில் எழுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006

வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள் ஒன்றிருக்கும் ஆனால் ஒரு சிலருக்குத்தான் இப்படியான மறக்க முடியாத நாள் வரும். என் வாழ்வு திசை மாறிய நாள்.மரண பயம் என்பதை அறிந்த நாள். என் மகள் சுனாமியில் இறந்தபின் மகன் பிறப்பில் மகிழ்ச்சியயை சுவாசிக்க தொடங்கிய நாட்கள். மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்து விட்டு வீட்டில் மகனோடு இரவு சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.வீடு முழுவதும் விருந்தினர்களால் நிறைந்திருந்தது.மூதூரிலிருந்து அகதியாய் வந்த என் உறவினர்கள் நூறுக்கு மேல் தங்கியிருந்தனர்.

(“ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006” தொடர்ந்து வாசிக்க…)

ஊதிக் கெடுத்தல்

(முகம்மது தம்பி மரைக்கார்)

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

(“ஊதிக் கெடுத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால், யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட “எழுக தமிழ்” பேரணி, அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு இருந்தால் அந்த நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறியது என்பதை, எதிர்காலத்தில் தான் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

(“எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

“வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”

பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன்.

(““வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா: கலையும் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கனவுகள் அழகானவை; பல சமயம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி நினைத்ததிலும் அதிகமாகலாம். கனவு தரக்கூடிய மகிழ்ச்சியை நனவு மறுக்கிறது. ஆனால், கண்ட கனவை நனவாக்கிச் சாதித்தவர்களும் இப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் வாழ்கிறார்கள். சாத்தியமற்றதாய்த் தெரிவதைச் சாத்தியமாக்குவதற்கான வித்து கனவிலேயே விதைபட்டு நனவில் அறுவடையாகிறது. கண்ட கனவு கண்முன்னே கரைந்து மெல்ல மெல்லக் கலைவதைக் காண்பது வேதனையானது.

(“வெனிசுவேலா: கலையும் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்

(விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பற்றி கருணாகரன் சுகன் சாகரன் என்ன கூறுகின்றார்கள்)

கருணாகரன்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைப்பற்றியும் சவால்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தி வருகிறேன். இவர்களுடைய நிலைமையைப்பற்றி வேறு சிலரும் தொடர்ச்சியாக உரையாடல்களைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)