பற்குணம் தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்பட்டன.ஆனால் நாங்களோ பற்குணம் தொடர்பாக கவலையுடன் இருந்தோம்.அம்மாவின் நிலை ஒருபுறம் ஏக்கம்.இதேபோல இன்னொரு சம்பவம் அனுராதபுரத்தில் நடந்தது. அதை இலங்கை அரசு தனது அறிக்கையில் வாசித்தது. நல்லவேளை பற்குணம் தொடர்பான செய்திகள் அந்த அறிக்கையில் வரவில்லை. அனுராதபுரத்தில் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அந்த தமிழரை ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி காப்பாற்றி யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
பிரபாகரனும் முஸ்லீம் காங்கிரசும்
“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன் , திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.” இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம். இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரியில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபின்னர், ரணில் என் காலடிக்கு வரவேண்டும் , தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம் பிடித்தும் ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை. (Bazeer Seyed)
பற்குணம் A.F.C (பகுதி 61 )
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் பற்குணம் பற்றிய தகவல்கள் வேகமாக பரவின.இந்த செய்தி எங்கள் காதுகளுக்கும் வந்தன.நாங்களோ பற்குணம் தொடர்பான தகவல்களை அறியமுடியவில்லை.அய்யா சாஸ்திர நம்பிக்கை உள்ளவர்.எனவே அவர் ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்.அவர் தனக்கு புத்திர சோகம் இல்லை என்பார்.அவர் வாழ்வில் அது உண்மையானதே.
பயிரை மேய்ந்த வேலிகள்..(9)
(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)
அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின்நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.
பொய்க் குற்றச்சாட்டுகள்
1980 ஆம் ஆண்டளவில் பருத்தித்துறையில் கமலம் என்கிற பாடசாலை மாணவி அவரின் ஒன்றுவிட்ட அண்ண்ன் துணையுடன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் ஆனைவிழுந்தான் மணற்காட்டில் புதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
உலகை உருக வைத்த அழுகை!
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.
மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]
இந்திய இராணுவ அதிகாரிகள் எல்லாம் ஆங்கில அறிவு கொண்டவர்கள் என்பதால் எனக்கு தெரியாத ஹிந்தியில் மாரடிக்கவேண்டிய நிலை ஏற்ப்படவில்லை. நான் யார், இந்திய தூதரகத்துடனான எனது தொடர்பு பற்றி கூறியபின்பே அமர ஆசனம் தந்தார் அந்த அதிகாரி. ஜோர்ஜ் பற்றி விசாரித்தபோது பல குற்றசாட்டுக்களை அடுக்கினார். அந்த நேரம் புலிகளின் எடுபிடிகள் சில காரியங்களை ஊரில் செய்து பழி எம்மவர் மேல் விழுந்து, இந்திய அமைதிப் படையுடனான எமது உறவை சீர்குலைக்கும் நரித்தனம் புரிந்தனர். அவ்வாறான புலிகள் செய்த நிகழ்வொன்றில் மாட்டிவிடப்பட்டவர் ஜோர்ஜ் என்பதை அவருக்கு விளக்கினேன். சிறிது நேரத்தில் ஜோர்ஜ் இராணுவ ஜீப்பில் அழைத்துவரப்பட்டார். முகம் சிவந்திருந்தது. அப்போது தங்கமகேந்திரனின் தங்கை சாந்தி என்னிடம் ஜோர்ஜை இந்திய அதிகாரி ஒருவர் செருப்பால் அடித்ததாக குற்றம் சாட்டினார்.
(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்ந்த வேலிகள்..(8)
(முறிக்கப்பட்ட கோடாரி காம்புகள்)
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.
2.போராளிகுடும்பத்தினர்.
3.மாவீரர்குடுப்பத்தினர்.
4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.
5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.
6.எல்லைப்படை போன்ற அமைப்புகளின் குடுப்பத்தினர்.
7.புலிகளின் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை வைத்திருந்த்து தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வந்தவர்கள்.
8.தாம் செய்கின்ற தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள புலிகளுக்கு ஆதரவாளர்களாக செயற்படுவாதாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டோர்.
9.புலிகளுடன் எவ்வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவிரும்பாதவர்கள்.
பற்குணம் A.F.C (பகுதி 60 )
தேர்தல்கள் முடிந்தபின் பற்குணம் பழையபடி கொழும்பில் பணியாற்றினார்.ஆனாலும் சில தேர்தல் சம்பந்தமான வழக்குகள்,காரணமாக நுவரெலியா போய்வருவார்அதுபோலவே உணவுத்திணைக்கள வழக்குகள் காரணமாகவும் அடிக்கடி திருகோணமலை போய்வருவார். ஒரு நாள் தேர்தல் வழக்கு காரணமாக நுவரெலியா போகவேண்டி இருந்தது.வேறு தேவைகள் காரணமாக அதை தள்ளிப்போட்டு வீட்டில் நின்றார்.
உலகவங்கியும் நாமும்….( The World Bank )
இந்த உலக வாங்கி இதுவரையும் உலகில் கிட்ட தடட 5 மில்லியன் மக்களை வீடில்லாதவர்கள் ஆக்கி நடுத்தெருவில் விடட ஒரு அமைப்பு. பல சிறிய நாடுகளை கடன்காரர் முக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய உண்மையான வேலை வட்டிக்கு கொடுப்பது. முக்கியம் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதே…
இது ஒரு தனிப்படட வாங்கி….
(“உலகவங்கியும் நாமும்….( The World Bank )” தொடர்ந்து வாசிக்க…)