பற்குணம் ( பதிவு 3)

அண்ணன் பற்குணம் நாங்கள் அறிந்தவரையில் மிகவும் துணிச்சலான மனிதர்.ஆனால் அவர் சிறு பராயம் அப்படி அல்ல.குழந்தையில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு தப்பியவர்.15 வயது வரையில் மிகவும் பயந்த ஒருவராகவே வாழ்ந்தவர். அம்மா காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்த காலத்தில் இவர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் பெரிய அண்ணனைத் தொடர்ந்து படிக்க சேர்ந்தார்.இவர் சேர்ந்த காலத்தில் நடராசாவும் மற்றும் இருவரும் படிப்பை முடித்துவிட்டனர்.எனவே பெரிய அண்ணன் துணையோடு பள்ளிக்குப் போய் வந்தார்.இவர் சேர்ந்த பின் ஒரு உண்மை அய்யாவுக்கு தெரியவந்தது.பெரிய அண்ணன் பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை .கண்டித்துப் பார்த்தார்.அப்பவும் ஏமாற்றமே.எனவே அவரை வரணி மகாவித்தியாலயத்துக்கு மாற்றிவிட்டார்.

(“பற்குணம் ( பதிவு 3)” தொடர்ந்து வாசிக்க…)

சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் “நீங்க எந்த ஆளுங்க…?” என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம். தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய “தலித் இளைஞர்களின்” கொலைகளில் இது மூன்றாவது கொலை.

(“சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் -(பதிவு-2)

எங்கள் அம்மாவின் பெயர் வள்ளிப்பிள்ளை.மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் பிள்ளை.சிறுவயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் அண்ணன்கள் அரவணைப்பில் வாழ்ந்தவர்.அய்யாவும் அம்மாவும் காதல் திருமணம்தான்.அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். யாழ் குடாநாட்டின் பெரும் வயல்நிலப்பரப்பான தனங்கிளப்பு வயல்களில் அம்மாவின் காலடிகள் பதித்தவர்.எனது கிராமத்தில் இருந்து கேரதீவுப் -சங்குப்பிட்டி பால எல்லைவரை சென்று கூலிவேலை செய்து உழைத்தவர்.

(“பற்குணம் -(பதிவு-2)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 1)

(இது ஒரு தனி நபர் பற்றிய பதிவாக பலராலும் பார்க்கப்படலாம். ஆனால் என்பார்வையில் ‘பற்குணம்’ என்பது ஒரு சமூகத்தின் குறியீடாகவே நான் பார்கின்றேன். இந்தப்பதிவு தமிழ் சமூகத்திற்குள் நிலவி வந்த வருகின்ற ‘சிறுபான்மை’ என்ற கருத்தியலின் உள் கட்டமைப்பை தெளிவுபடுத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவே இதனைப் இங்கு தொடரந்தும் பிரசுரிக்கின்றேன் – ஆசிரியர்)

எங்கள் பிறப்புக்கும் அறிவுக்கும் மூலகாரணமான அய்யாவில் இருந்து ஆரம்பிக்கின்றேன். அய்யா மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர்.ஒரே சகோதரி.சிறுவயதில் தாயை இழந்து தனிமையில் துன்பப்பட்டவர்.அவருக்கு கல்விமீது தீராத ஆசை.எமது கிராமத்தில் அந்தக் காலத்தில் சிறுபாடசாலை இயங்கியது.அதில் உயர் சாதிமாணவரகளுக்கே கற்பித்தனர்.அதில் அய்யாவின் வயதை ஒத்த சிலர் படிக்க விரும்ப அவர்களும் அனுமதித்தார்கள்.ஆனால் வெளியே நின்றுதான் படிக்க வேண்டும்.கோடை காலம் வெயில்.மழைகாலம் வெள்ளம்.இதைச் சகித்தே படிக்கவேண்டும்.

(“பற்குணம் (பதிவு 1)” தொடர்ந்து வாசிக்க…)

புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……

ஆரம்பத்தில் மிதவாத அரசியல் ஈழ தலைவர்களை துரோகி என்றீர்கள் அதற்க்கும் தலையாட்டினோம். பின் மாற்று போராட்ட தலைவர்களையும் போராளிகளையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். எல்லா சிங்கள அரசையும் சிங்கள தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். முஸ்லிம்களை ஒதுக்கினீர்கள் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். இந்திய தலைவர்களையும் இந்தியாவையும் அவர்களோடு உறவு வைத்திருந்த தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம்.

(“புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 14, மாமேதை, புரட்சியாளர் காரல் மார்க்சு நினைவுநாள்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களை யும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுக ளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

(“மார்ச் 14, மாமேதை, புரட்சியாளர் காரல் மார்க்சு நினைவுநாள்” தொடர்ந்து வாசிக்க…)

தொப்புள் கொடி…….

1827 இல் இருந்து இன்றுவரையும் எம்முடன் இருக்கும் மலையக தமிழர்களை ………

ஒரு போதும் அல்லது ஒருநாளும் ………

தொப்புள் கொடிகள் என்று ஆதரித்ததில்லை…………

ஒரு மனிதர்கள் ஆகவே மதித்ததில்லை…..

இலங்கை தமிழர்களின் ஈழத்துக்காக கூட போராடி மரித்தார்கள்……….

எம்முடன் வாழும் இந்த மக்களை தொப்புள் கொடி என்று அழைக்காமல்…….

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை தொப்புள்கொடி தொடர்பை பேசுவதும் தான் ஏனோ??????

(Annesley)

பாலஸ்தீனப் பெண் போராளிகள்

 

கண்ணில் தெரியும் ஆக்ரோஷத்தைப் பாருங்கள்…… முகம் மறைத்தல் என்பது அவர்கள் கலாச்சாரம் போராடுதல் என்பது அவர்கள் உரிமை.

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம்

தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, தனக்குத் தானே ‘சக்கர வியூகத்தை’ வகுத்துக் கொண்டிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவரும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கான வியூகம் பற்றி, பெப்ரவரி 20ஆம் திகதி, பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தார். பொதுக்கூட்டத்தில் நான் ‘கிங்’ ஆக இருக்க வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக’ இருக்க வேண்டுமா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டு, ‘தொண்டர்கள், கிங்காக இருக்கச் சொல்லி விட்டார்கள்’ என்று அறிவித்தார்.

(“தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம்” தொடர்ந்து வாசிக்க…)

சுந்தர் எனும் தோழனாய்

ஒரு வருசம் கடந்து போனது உன் நினைவில்.எப்படி இன்னும் நம்ப மறுக்கிறது மனம் ,கடந்து செல்லும் நினைவுகள் ,காலம் எனும் கடலில் நாம் கரைந்து போகும் என்பார்கள்.எல்லாம் நிஜமாய் எப்போதும் நம்முள். 1974 முதல் சந்திப்பு தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து ”ஈழ விடுதலை இயக்கம் ” (தமிழீழ விடுதலை இயக்கமல்ல) மகிழ்த்த நேரம்,சேனையூர் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதியில் ஆசிரியர் புலோலியூர் .தா.ஜெயவீரசிங்கம் அவர்களோடு அன்னலிங்க அய்யா,தங்க மகேந்திரன் அத்தோடு சுந்தரும்.ஈழவிடுதலை இயக்க பரப்புரைக்கு புறப்படுகிறோம் .சம்பூரில் தோடம் பழம்,கிளிவெட்டியில் தவகுமார்,கங்கு வேலியில் கிருபா,பட்டித்திடலில் கவிஞர் ,வீரப்பா,மல்லிகைத்தீவில் சுரேஸ்,பள்ளிகுடியிருப்பு,பச்சநூல் ,கூனித்தீவு ஈச்சலம்பத்தை, என கொட்டியாரத்தின் கிராமங்கள் தோறும் பலநூறு பேரின் அணி சேர்ப்பு.நடந்தே கழிகிறது எங்கள் பயணம் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எங்களோடு இணைகின்றனர்.

(“சுந்தர் எனும் தோழனாய்” தொடர்ந்து வாசிக்க…)