தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)

எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன.

(“ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும். இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் செய்(த)வினை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்கு அவர்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல,எந்த வகையில் எல்லாம் அரசியல் தீர்வு கிடைக்க கூடாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் இழுத்து மூடினார்கள். இதன் விளைவு தான் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம். அதுவும் இறுதியில் இரத்த ஆற்றோடு முடிவுக்கு வந்தது.

(“மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)

மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை!

உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை, இனி நாம் உருவாக்கவேண்டும் என்பதே அக்கருத்து. இது பிரதமரால் தனது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து எனினும்,
இன்றைய நிலைமையில் இக்கருத்து, அனைத்துக் கட்சிகளாலும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றேயாம். முக்கியமாக நம் தமிழர் தலைமைகள் இதுபற்றி ஆழச் சிந்திக்கவேண்டும்.

(“மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)

இந்த போராட்டம் தொடங்கியபோது அச்சுவேலியிலும் சில இளைஞர்கள் தொடங்க ஆவலாக நின்றனர்.அவரகள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.அச்சுவேலி தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் வாழும் பிரதேசம்.பொருளாதார வளம் நிறைந்த மக்கள்.ஆனாலும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க துணியவில்லை.ஆனாலும் ஒரு சிலர் சேர்ந்து குழுவாக இயங்கினர்.அதில் எனது உறவினர் அரியண்ணை என்று நாங்கள் அழைக்கும் அரியரத்தினம் சந்தர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)

இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார். இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 10)

18 மாசி 1968 அன்று இரத்தினம் கொல்லப்பட்டார்

இந்த தினத்தில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொலை வழக்கின் ஆரம்ப விசாரணைக்கு எல்லோரும் போக வேண்டும,.இந்த அன்று இரத்தினம் போகப் புறப்படும்போது எனது அம்மாவின் சிறிய தகப்பன் கனகச்சாமி என்பவர் தன் தங்கையுடன் காலையில் இரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.இவருக்கு கண் தெரியாது.இவருக்கு இரத்தினத்தின் சாதகபலன்கள் அறிந்தவர்.இரத்தினம் பொதுவாக பெரியவர்களிடத்தில் மரியாதையானவர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 10)” தொடர்ந்து வாசிக்க…)