தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதற்கு முன்னர் மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஷெய்த் ராத் அல் ஹ§ஸைனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் தமிழ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. இரு சாராரும் அந்த அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள்.

(“தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)

(மாதவன் சஞ்சயன்)

ஆரம்பத்தில் 25 நாடுகள் ஆதரவளித்த நிலையில் தற்போது 38 நாடுகளும் நாளடைவில் அனைத்து நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியில் நாம் சர்வதேசத்தின் கரிசனையில் வந்துள்ளமை தெரிகிறது. நாடுகளின் நலன்களுள் எம் நலன்களும் அடங்கும் விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு எமக்கு சாதகமானதை பெறுவதே புத்திசாலித்தனம். இந்த நிலையில் நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் முன்னெடுத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். பிரிவினை திட்டத்தை இந்தியா ஆரம்பத்திலேயே ஆதரிக்கவில்லை என்பதை சம்மந்தர் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காலம் கடந்தாவது பகிரங்கமாக இன்று ஒத்துக்கொள்கின்றனர். இந்திய அனுசரணை இன்றி எதுவும் அரங்கேறாது.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

இந்தக் கேள்வியை கேட்பவர்கள் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாய் வீரம் பேசுபவர்களும், விதாண்ட வாதம் புரிபவர்களும், இனப் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை கூறி மக்களை பலிக்கடா ஆக்கி நடைபவனி, கையெழுத்து வேட்டை என நடத்தி தம்மை பிரபலப்படுத்தி, அதில் கலந்து கொண்டவரை, ஜெயக்குமாரி போல் சிறைக்கும் பருவமடையாத அவர் மகளை சிறுவர் காப்பகத்துக்கு அனுப்புபவர்களும் ஆடும் நாடகம் தெரியவரும்.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?” தொடர்ந்து வாசிக்க…)

கடவுளே!

(சனிக்கிழமை சம்பவம்.)

இப்படி ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து மோட்டார் சைக்கிள் டயரை கழுத்தில் மாட்டி மண்ணெண்னை ஊற்றி உயிருடன் எரித்ததை எனது சிறுவயதில் பார்க்க நேர்ந்தது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒரு சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இந்த கொடூரம் நிகழ்தப்பட்டது. ஏன்? எதற்காக? யார் எரித்தார்கள்? என்பது எனக்கு அவ்வளவாக அப்போது விளங்கவில்லை. ஆனால் பின்னாளில் எனக்கு நன்றாகவே புரிந்தது.

(“கடவுளே!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இம்முறை அவ் அரசாங்கத்தின் அனுசரணையுடனான ஒரு பிரேரணையே முன்வைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுஸைன், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக அவரது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கையை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அதில் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

(“ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானியா சுதந்திரம் தந்த பின் தொடர்ந்து வந்த அரசுகளின், தமிழர் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் தான் முரண்பாட்டின் ஆரம்பம். இரு தரப்பு தலைவர்களும் தமது வாக்கு அரசியலை செய்து இன விரோதத்தை வளர்த்து விட்டனர். அதே வேளை பெரும்பான்மை இனத்துள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு புகையத்தொடங்கி அது 1971ல் படித்தவேலையற்ற தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுத புரட்சிக்கு வித்திட்டது. அதே காலத்தில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறை தமது படிப்பை, தம் எதிர்காலத்தை பாதிக்கும் செயல் என்ற பயம் யாழ் மாவட்ட மாணவரை, அரசை எதிர்த்துப் போராட தூண்டியது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவா பயணங்கள்……..!

(சாகரன்)

இப்போது எல்லாம் ஜெனிவாவிற்கு பயணமாதல் என்பது 1970 களில் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக பயணமானார் என்று தினகரன் பத்திரிகையில் வரும் விளம்பரச் செய்திகள் போல் ஆகிவிட்டது. இலங்கை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அரசியல் உரிமை மறுப்புக்கள் என்பனவற்றிற்கு தீர்வைப் பெறும் நடவடிக்கைக்காக பயணம் என்பதை விட ஒரு வகையில் பிரபல்யம் தேடும், பொழுதுபோக்கும் செயற்பாடுகளை ஒத்ததாகவே இப் பயணங்கள் அமைகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இலங்கையில் நடைபெற்றது இனப்பாகுபாடும், இதனைத் தொடர்ந்த இன ஒழிப்பும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களுக்கு நாம் 1958 தொடக்கம் நடைபெற்று வந்த கலவரம் தொடக்கம் இறுதியாக நடைபெற்ற 1983 வரையிலான கலவரங்கள் வரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவவதன் மூலமே இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையின் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பாகுபடுதப்பட்டார்கள், இதனைத் தொடர்ந்து இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளில் பேரினவாத அரசுகள் முயன்றன என்பதை நிரூபிக்க முடியும். கூடவே தமிழ் பேசும் மக்களுக்கான தொடர்சியான பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இல்லாது ஒழிக்கப்டுவதையும், உரிமைகள் வழங்குவதில் பெரும்பான்மை மக்களை முதன்மைப்படுத்தி பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதையும் புள்ளிவிபரங்களுடன் காட்ட வேண்டும். இதற்கு பலம் சேர்க்க மட்டும் பிரபல்யப்படுத்தப்பட்ட முள்ளிவாய்கால் படுகொலையை சேர்க்கலாம். மாறாக முள்ளிவாய்காலில் மட்டும் தொங்கி நின்றால் யுத்தம் இருதரப்பினரால் புரியப்பட்ட போது மரணங்கள் நிகழும் என்ற கோதாவில் இன ஒழிப்பு, இனப்பாகுபாடு என்பவை அடிபட்டே போகும். மேலும் புலிகளை அழித்து இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட சர்வதேசமும் அன்று பக்க பலமாக இருந்த நிலையில் பக்க பலமாக நின்றவர்களே இந்த யுத்தம் இனப்பாகுபாட்டின் அடிப்படையில் நடாத்தப்பட்டது என்பதில் ஒத்துவருவார்களா? அல்லது இதனைத் சீர்தூக்கிப் பார்பார்களா? என்பது ஐயமே. எனவே 60 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் அரசாங்கங்கள் நடாத்திய திட்டமிட்ட கலவரங்களையும், சலுகை மறுப்புக்களையும், உரிமை மறுப்புக்களையும், எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டதையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் வெற்றி எமதே. மாறாக உசுப்பேத்த அல்லது பழிவாங்க மட்டும் முள்ளிவாய்காலை மட்டும் தூக்கிபிடித்தால் ஜெனிவா பயணம் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் புலம்பெயர் தேசம் எங்கும் பிரபாகரன் படத்துடனும், புலிக் கொடியுடனும் வீதிகளில் மக்களை இறக்கி கூச்சல் இட்டும் பிரபாகரனக் காப்பாற்ற முடியாமல் போனது போலவே அமைந்து விடும். பிரபாகரனை நேசித்தவர்களின் வலி என்பதை விட இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமை முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)

(மாதவன் சஞ்சயன்)

வட மாகாண முதலமைச்சர் தனக்கு தரப்பட்ட வேலையை விட்டு அடுத்தவர் செயலை முடக்கும் செயலை அண்மைக் காலங்களில் செய்யத் தொடங்கி உள்ளார். மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை அவர் முன் சத்திய பிரமாணம் எடுத்து நல்லுறவை பேண முற்பட்டவர், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருடன் முரண்பட தொடங்கினார். தன் போக்கில் செயல்பட அவர்கள் விடாததால் அவர்களை மாற்றும்படி மகிந்தவிடம் முறையிட்டார். மகிந்த ஆரம்பத்தில் சம்மதித்தாலும் அவரது அமைச்சர் அதனை தடுத்தார். வல்வெட்டியில் பிரபாகரன் மாவீரன் என கூறி புலியடி செல்ல புறப்பட்ட முதல்வர் பற்றி வத்தி வைத்தார். விக்கியர் தேர்தல் காலத்தில் ராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறினார். ராணுவ ஆளுனரை மாற்றுவேன் என்றார். இரண்டும் தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் அமைச்சர் மகிந்தரின் மனதை மாற்றியதால் முதல்வர் கோரிக்கை நிறைவேற வில்லை.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !

இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும், பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது (அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.

(“இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்

சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய செய்திகள்தான் அண்மைய நாட்களில் பத்திரிகைகளையும் இணையத்தளங்களையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் நாட்டின் ஆட்சியைப் பாரமெடுத்த பிற்பாடு, கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்பின்னணியில் ஜெனீவா அமர்வு இடம்பெறுகின்றமையால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

(“மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்” தொடர்ந்து வாசிக்க…)