இந்தியாவுடனான கடல் பாலத்தை இலங்கை மக்கள் எதிர்க்கின்றனர்

(டாக்டர். சுதா ராமச்சந்திரன்)

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு கடல் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்க தயாராக இருப்பது போல், இலங்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. படம் மோடி அரசால் தனுஷ்கோடி வரை கட்டி முடிக்கப்பட்ட அதிவேக கடல் தரை பாதையாகும். இங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு 22 கிலோ மீட்டரே உள்ளது. (ஆசியா டைம்ஸ் 23டிசம்பர் 2015)

சிந்திக்க வைத்து… சிலிர்த்த நாடு சிலி

(தோழர் சாகரன்)

நெருப்பும் பனியும் நிறைந்த அற்புத பூமி என்று சொல்வார்கள் சிலி நாட்டை. அங்கு தீவிர வலதுசாரி அரசிற்கும் அதன் எதிர் கொள்கையுடைய இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றியீட்டியுள்ளார்கள். நாட்டின் இயற்கை அமைப்பைப் போலவே அரசியல் செயற்பாடும் அங்கு அமைத்திருப்பது இயற்பியல் அதிசயமாக அரசியல் அவதானிகளால் ஒப்பீட்டுப் பார்க்கப்படுவதுண்டு.

ஜவஹர் பதின்மூன்று

(Rathan Chandrasekar)

வருடங்கள் முந்தி

என்ன செய்தார்கள் தெரியுமா?

சர்வதேசத் தகவல் தளமான

விக்கிப்பீடியாவுக்குள் நுழைந்து,

ஓர் இழிவான செயலை

அவர்கள் அரங்கேற்றினார்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

(தோழர் சாகரன்)

Managua, NICARAGUA: Former Nicaragua’s President and leader of the leftist National Sandinista Liberation Front (FSLN) Daniel Ortega, rides a horse in the streets of Managua, in direction of a meeting to celebrate the 27th anniversary of the victory of the sandinista revolution, 19 July 2006. Ortega is the presidential candidate of the FSLN for next 05 November’s national elections. AFP PHOTO/Miguel ALVAREZ (Photo credit should read MIGUEL ALVAREZ/AFP via Getty Images)

உலகத்தின் ஒரு மூலையில் நம்பிக்கை தரும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் பல எமது கண்களுக்குத் தெரிவதில்லை. அது எங்கள் கண்களைஇ காதுகளை வந்தடையவிடாமல் பெரும் பணம் படைத்த அதிகார வர்க்கம் தனது ஊடகப் பலத்தினால் இருட்டடிப்புச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

மார்க்சும் ஜென்னியும்

(கணேசன்)

மூலதனம்’ நூலை எழுதி “கம்யூனிஸத்தின் தந்தை’ என்று பெயரெடுத்த கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர்தான் ஜென்னி. மார்க்சை அறிந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் அவரது மனைவி ஜென்னியைப் பற்றியும் அறிவர். அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று குறிப்பிட்டார் மார்க்ஸ். மார்க்சைவிட ஜென்னி 4 வயது மூத்தவர். ஜென்னியின அழகு, அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு ஆகியவை கார்ல் மார்க்சைப் பெரிதும் கவர்ந்தது.

மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர். மனிதன் தன்னுடைய சக மனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும், பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான். பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.

மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடைச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது. மார்க்ஸின் புரட்சிகரமான பணிகளால் காவல்துறை ஜென்னியையும் கைது செய்தது. அவர் இருண்ட சிறைக்குள் தள்ளப்பட்டார். அந்தச் சிறையில் வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், நீசத்தனமான கெட்ட நடத்தை உள்ள பெண்கள் ஆகியோர் காவலில் வைக்கப்படும் இடத்தில் ஒரு நாள் இரவைக் கழித்தார்.

மார்க்சின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அதை யாரும் எளிதில் படிக்க முடியாது. அந்தக் கையெழுத்தைப் படித்து, அதைப் பிரதிகள் எடுக்க வேண்டிய வேலையையும் ஜென்னி செய்து வந்தார். அவருடைய கையெழுத்து மோசமாக இருந்ததால்தான், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை.

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி, தோல் வெடித்து விட்டது. அதனால் நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது என்று மனம் திறந்து குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிட்டார்.

ஒரு நேரத்தில் மார்க்ஸ் குடும்பம் உணவின்றித் தவிக்க ஆரம்பித்தது. மார்க்சின் கோட்டும் பேண்டும், அடகுக் கடைக்குப் போய்விட்டன. எனவே அவர் வெளியே வர முடியாமல் இருந்தார். கடிதம் எழுதுவதற்குக் கூட வெள்ளைத் தாள் வாங்க முடியாத நிலையில் இருந்தனர். வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த இந்த நேரத்தில் அவர்களுடைய சின்னஞ்சிறு மகள் பிரான்சிஸ்கா மரணமடைந்தாள். அந்த மகளைப் புதைப்பதற்குக் கூட இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். அதுவும் கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையின்போதுதான் மரணமடைந்தாள்.

அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு அகதி ஒருவர் இங்கிலாந்தின் பணமான இரண்டு பவுண்டு கொடுத்து உதவினார். அந்தப் பணம் தான் சவப்பெட்டி வாங்குவதற்குப் பயன்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தபொழுது தொட்டில் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் முடியவில்லை என்கிறார் ஜென்னி.

இதன்பிறகு எட்கர் என்ற பெயருடைய அவர்களுடைய எட்டு வயது மகன் ஒரு வருடம் நோயினால் அல்லல்பட்டு மரணமடைந்தார். உருக்கு போன்ற எதற்கும் கலங்காத நெஞ்சுரமுள்ள மார்க்சையே மகனின் மரணம் நிலைகுலையச் செய்துவிட்டது. 1880-ம் ஆண்டில் ஜென்னியை நுரையீரல் நோய் பாதித்தது. பிறகு அது ஈரல் புற்றுநோயாக மாறியது.

அந்தப் புற்றுநோயின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலமானார். புற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட வேதனைகளையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜென்னியின் நகைச்சுவை குணம் ஒரு வினாடி கூட அவரைவிட்டு அகலவில்லை.

உயிர்போகும் கடைசி வினாடி வரை நல்ல நினைவுடன் இருந்தார். கடைசியாகத் தன் கணவர் மார்க்சிடம் என்னுடைய பலம் குறைந்து வருகிறது என்று கூறினார். ஜென்னி இறந்ததைக் கண்ட மார்க்சின் உயிர் நண்பர் ஏங்கல்ஸ், “மார்க்ஸ் செத்து விட்டார்’ என்று குறிப்பிட்டார். டிசம்பர் 5-ம் தேதி லண்டனில் ஏழை, எளிய சாமான்ய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹைகேட் என்னுமிடத்திலுள்ள கல்லறையில் ஜென்னி மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

உயிருக்குயிராக நேசித்த மனைவியின் இறுதி ஊர்வலத்தில் மார்க்ஸ் கலந்து கொள்ள முடியாதபடி மிகவும் பலவீனமாக அதுவும், மயங்கிய நிலையில் இருந்தார்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.

ஏங்கெல்ஸ்: ஜென்னி – மார்க்ஸ் ஆகியோர் வாழ்வில் அவ்வப்போது தோன்றிய வசந்தம் – ஏங்கெல்ஸ். மார்க்ஸ் மறைந்தபோது மூலதனத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியிடப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் மூலதனத்தின் 2ஆம் பாகமும் – 3ஆம் பாகமும் வெளிவர முழுப்பங்கு வகித்தவர்தான் ஏங்கெல்ஸ். இவர் ஜென்னிக்கும் மார்க்சுக்கும் தத்துவரீதியாகவும் – பொருளாதார ரீதியாகவும் துணை நின்றதோடல்லாமல் _ தன் மறைவுக்குப் பின் தன் சொத்தை எல்லாம் ஜென்னி – மார்க்சின் குழந்தைகளுக்கு உரிமையாக்கியவர்.

ஏங்கெல்ஸ் என்ற அருமை நண்பர் இல்லையெனில் ஜென்னி _ மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பின் பயன் உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது. இவர்களின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் சாறுதான் பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத் தளைகளைத் தவிர ஏதுமில்லை ஆனால், பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது. ஆகவே, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். இச்சாறு இன்றும் தொழிலாளர்களுக்கு உயிரூட்டுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க இவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராக தந்தை பெரியார் நம் நாட்டில் வருணஜாதி வேற்றுமைகளை வேரோடு அழிக்க அறிவாயுதம் ஏந்தினார்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. 1881ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் உயர்வான காதலுக்கும், பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமாக விளங்கிய ஜென்னி என்ற மலர் பூமியில் உதிர்ந்தது.

இவர்தம் சிந்தனைகள் ஏதும் இல்லாத மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்றும் இருந்து கொண்டுளளது. புரட்சி வணக்கம

சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) அவரது தொழிற்சாலை ஊழியர்களாலும் ஏனைய சில பாகிஸ்தானியர்களாலும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமையால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், பெரும் அசௌகரித்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சிலியில் வெல்கிறார் இடதுசாரி வேட்பாளர்!

சான்டியாகோ, டிச.6- டிசம்பர் 19 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் சிலி ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளரான காப்ரியல் போரிக் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரி விக்கின்றன.

ஜவஹர்… ஒன்பது

(Rathan Chandrasekar)

நேரு மெதுவாகத்தான் இருமினார் என்றுகூட குற்றச்சாட்டு வைக்கத் துணிந்துவிடுவார்கள்போல. வாய்ப்புக் கிட்டுகிறபோதெல்லாம் அவரை வைதுவிடவேண்டும் ; சேறு பூசிவிடவேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

உணவுப் பிரச்சினையை தீர்க்க நிதானம் தேவை

(கருணாகரன்)

அடுத்த ஆண்டில் இலங்கையில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. காரணம், உணவுப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் இலங்கை மிகவும் மோசமான உணவுப் பஞ்சத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 

முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

35-1. 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்சின் பொறிவுடன் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியானது ஒரு காலகட்டத்திற்குரிய பொருளாதாரச் வீழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படையான நிலைமுறிவாகும். நிதிய முறைமைக்கும் பிரதான கூட்டுத்தாபனங்களுக்கும் முண்டு கொடுப்பதற்கு, அரசாங்கங்களால் உட்செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார அமைப்பினை மறுஸ்திரம் செய்து விட்டிருந்ததாகத் தோன்றிய நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக மறைந்துவிட்டன. இந்த பிணையெடுப்புகளும் ஊக்குவிப்புப் பொதிகளும், உண்மையில் தனியார் சுரண்டல்காரர்கள் மற்றும் ஊக வணிகர்களின் மலை போன்று குவிந்திருந்த திரும்பிச் செலுத்தமுடியாத கடனை, அரசாங்கக் கணக்கிற்கு மாற்றி விட்டு, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இன்னும் விரிந்து சென்று, பெரும் ஆபத்தான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் விளக்கியதாவது: “நிலைமுறிவு என்றால் முதலாளித்துவம் தீடீரென இயங்காது நின்று போய் விடுகிறது என்று அர்த்தமல்ல. இது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டம் திறப்பதை அடையாளப்படுத்துகிறது, இதில் பழைய கட்டமைப்புகளான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் மற்றும் அத்துடன் சித்தாந்தங்கள் மற்றும் சிந்திக்கும் வழிவகைகளும் சமுதாயத்தின் தலைவிதியை தானே முடிவெடுக்கும் புதிய வகையிலான அரசியல் போராட்டம் அபிவிருத்தியடைவதற்கு பாதையை திறந்து விடுகின்றன.”[71]