நீர் முகாமைத்துவம்

(கணேஸ்)

இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.

கடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.

இப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.

மழைநீர் சேமிப்பு

இரணைமடு குளத்தின் கண அளவிலும் பார்க்க நான்கு மடங்கு கொள்ளளவு கொண்ட நீர்நிலைகளை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள் அமீர்கான் மற்றும் கீரன் ராவ் தம்பதியினர். அவர்களுடைய இந்தப் பணி மேலும் தொடர்கிறது.

குளங்களை காத்து புனரமைக்காதுவிடின் யாழ் நீருள் மூழ்கும்”

இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன்
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.

16 குளங்கள் கட்டிய கதை

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.

கொழும்பு வாழ்க்கையும் கொரோனாவும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கொவிட்-19 நோயின் காரணமாக, பெரும் நெருக்கடியை நாடு, எதிர்நோக்கி இருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தாலும் அம் மாவட்டத்தின் நிலையை விட, கொழும்பு மாவட்டத்தின் நிலைமை, அதிலும் கொழும்பு மாநகரத்தின் நிலைமை, மிகவும் மோசமாக இருக்கிறது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது.

இலங்கையில் கொரனா: வளர்ந்து வரும் இறப்புகள் மற்றும் தவறான கூற்றுக்கள்

ஒரு மாதத்திற்கு முன்பு (அக்டோபர ;04 2020) மினுவாங்கோடாவில் உள்ள ஒரு பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா வைரஸின் புதிய தொற்று கண்டறியப்பட்டது. அது, அந்த நேரத்தில், ‘பிராண்டிக்ஸ் கிளஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டில் மொத்தம் 7,872 வைரஸ்கள் தொற்றாளர்கள், பதிவாகியுள்ளன. மொத்தம் 3,803 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 13 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன்

(பேராசிரியர் சி. மௌனகுரு)

நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்.

(Rathan Chandrasekar)

ஜனநாயகம் என்பது –
‘கருத்துச் சுதந்தரம் என்பது –
‘மனித உரிமை’ என்பது –
தமக்கு ஒவ்வாத குரலையும் –
தமக்கு எதிரான கருத்தையும்
அனுமதிப்பதுதான்.

காவிரி ஆறு பற்றிய நல்ல தகவல்

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் – பிறந்து வளர்ந்தது – MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
“சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?” என்றார்.