இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது. தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.
த்வீபா திரைப்படக் காட்சிகள். வாழ்க்கையை விட சினிமா பெரியது இல்லை. அப்படிப் பெரியதாக இருக்க வேண்டுமெனில் சினிமாக்களிலேயே சிறந்த சினிமாவாக அது இருக்க வேண்டும். சமூகத்தின், வாழ்வின், மனிதர்களின் நிதர்சனத்தை எடுத்துக்காட்ட வேண்டும். மிகைப்பூச்சு ஏதுமின்றி நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் ஒரு பிரதிபிம்பமாக அது இருக்க வேண்டும். பெண்ணுக்கான, விளிம்புநிலை மனிதர்களுக்கான நீதியை சினிமாவுக்கான கலை மொழியில் பேசினால் உண்மையில் அது பெரிய சினிமாதான்.
தொற்றா நோய்களில் இன்று முதன்மையாக இருப்பது ‘நீரிழிவு’ இது ஒருகாலத்தில் பணக்காரர் வருத்தம் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இன்று குடும்பத்தில் 4:1 பேருக்கு உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
மாணவி பாத்திமா இந்திய அளவில் ஐஐடி நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்றார். கேரளா எனும் கடவுளின் சொந்த பூமியிலிருந்து சென்னை வந்தார். முதன் முதல் விடுதி வாழ்க்கை . மனம் பாதிக்கும் அளவில் சில ஆசிரியர்கள் நடந்தது கொண்டனர் என எழுதி வைத்துள்ளார் . எதையும் பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் பகிரவில்லை. இது ஏன் எனவும் தெரிவிக்க அல்லது புரியவைக்க யாரும் இல்லை.
36 வீட்டில் நடக்கூடிய மரங்கள்
மா , பலா , ஈரப்பலா , தோடை ,எலும்பிச்சை , அரிநெல்லி , கொய்யா , யம்பு , மாதுளை , அவகோடா , சீமைஇலுப்பை , தென்னை , மரமுந்திரி , அன்னமுன்னா —
37 இப்போ அநேகமானோர் உயிர் வேலிகளை அகற்றி தகர வேலிகளை அமைத்து வருகிறார்கள் . இதில் பட்டுத்தெறிக்கும் வெயில் , வளவையும் வீட்டையும் மிகுந்த உஷ்ணமாக்கிறது.
சீமெந்து மதில்கள் , தகரவேலிகள் என்பனவற்றை விட உயிர்வேலிகளே நமது வீடுகளை மிகவும் பாதுகாக்கிறது .
உயிர்வேலிகளை ஏறிக்குதித்து நமது வளவுக்குள் திருடர்கள் நுழைய முடியாது .
நீங்கள் தகர வேலிகள் அமைந்திருந்தாலும் கீழ்வரும் மரங்களை தகரவேலிக்கிடையில் நட்டால் சூழல் குளிர்ச்சியாவதோடு வீடும் பாதுகாக்கப்படுகிறது.உகந்த மரங்கள்
கிளிசீரிடியா , பூவரசு , அகத்தி , இப்பில் இப்பில் , வாதநாராயணி.
38 பொது வெளிகளில் புளி, வேம்பு இலுப்பை புன்னை ஆகியவற்றை அதிகம் நாட்டுவது சிறப்பானது .
இன்று வளவுகளில் உள்ள அநேக புளிய மரங்கள் மூடக்கொள்கை காரணமாக தறிக்கப்பட்ட காரணத்தால் இன்று புளி உச்சவிலையைத் தொட்டு நிற்கிறது.
நெடும் சாலைகளிலும் பொது இடங்களிலும் புளியை நாட்டினால் சட்டத்துக்கு பயந்து யாரும் தறிக்க மாட்டார்கள் .
தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது , நெடும்சாலையோரம் எல்லாம் புளியை நட்டாராம் . அப்போது அநேகர் அவரை கேலி செய்தார்களாம் .
இன்று தமிழ்நாட்டுக்கு அதிக வருமானம் பெற்றுத்தருபவை அந்த சாலையோர புளியமரங்களே .
39 ஏன் எண்ணெய்வித்துப் பயிர்கள் அதிகம் நடவேண்டும் ?
இன்று பாம்ஒயிலின் பாவனை குறைந்து உலகளாவிய ரீதியில் தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகரித்து வருகிறது .
சவர்க்காரம் செய்யப்பயன்படும் மூலப்பொருள்களில் முக்கியமானது தேங்காய் எண்ணையும் விலங்கு கொழுப்புமாகும் . தேங்காய் எண்ணெயின் உச்சவிலை சவர்க்கார உற்பத்தியாளர்களை வேறு தாவரஎண்ணைகளை நாடவைக்கும் . இதனால் வேப்பெண்ணெய் , இலுப்பெண்ணை, புன்னைஎண்ணெய் , ரப்பர்வித்து எண்ணெய் என்பவற்றிற்கு அதிக சந்தைமானம் கிடைக்கும் . இப்பொழுதே வேப்பெண்ணெய் போத்தல் 1000 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது . சுவிஸில் இலுப்பெண்ணை இங்கத்தைய பெறுமதியில் அங்கு 9000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக Inuvaijur Mayuran குறிப்பிடுகிறார் . எனவே நெடும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் அதிகளவு புளி ,வேம்பு , இலுப்பை ,புன்னை ஆகிய மரங்களை அதிகளவில் நடுவோம் .
40 கீழுள்ள படம் எனது மகள் பிறந்தபோது எமது ஆலய வீதியில் என்னால் நடப்ட்டட இலுப்பைமரம் .இன்று இதன் விதைகளில் இருந்து பெறப்படட இலுப்பெண்ணையில் இருந்தே கோவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன .
இம்மரம் மகளை , இம்முறை ஊவாவெல்ல பல்கலைக்கழகத்திற்கு Mineral resource and management கற்கை நெறிக்கு அனுப்பிவைக்கிறது.
October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது . 19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
(ரா.சதீஸ்குமார், கே.அருண்) சூழலுக்குப் பயனற்ற அந்நிய களைத்தாவரங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் தொட்டபெட்டா காடுகளில் சோலை மரங்கள் மெல்ல வளரத்தொடங்கியுள்ளது, காட்டுயிர் ஆய்வாளர்களிடம் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்துள்ளது.